Skip to main content

தீவிரவாதிகள் தாக்குதல்; 3 ராணுவ வீரர்கள் பலி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
indian army incident at jammu and kashmir

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள சூரன்கோட்டில் இருந்து  தானாமண்டி என்ற இடத்திற்கு ராணுவ வீரர்கள் வழக்கம் போல் 2 வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்கக் கூடுதல் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பூஞ்ச் ​​மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்