Skip to main content

இந்தியாவுக்கு இது 500 வது வெற்றி!!

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

 india wins 500  one-day cricket match

 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் 500வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாக்பூரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 49.3 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி. 

 

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும்,  பும்ரா,விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு பூஜியம் என இந்தியா முன்னிலை வகித்து வரும் நிலையில் அடுத்த போட்டி மார்ச் எட்டாம் தேதி  ராஞ்சியில் நடைபெறுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உலகக்கோப்பை டி20 அணி இன்று அறிவிப்பு? கீப்பராக இவருக்கே அதிக வாய்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
World Cup T20 team announcement who has more chances as a keeper

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மேற்கீந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட பட்டியலை ஒவ்வொரு அணியும் இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் ஐபிஎல்- இல் கலக்கி வரும் போல்ட், மிட்செல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் டி20 அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்படுவார் என ஏற்கனவே செயலாளர் ஜெய் ஷா அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்திய அணி எப்போது தேர்வு செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. 

ஐபிஎல்-இல் வீரர்களின் செயல்பாடும் கருத்தில் கொள்ளப்படும் என்கிற ரீதியிலும் தகவல்கள் உலா வந்தது.அதற்கு ஏற்றாற்போல் ஹர்திக் பாண்டியா பவுலிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும் என் கேப்டன் ரோஹித் விரும்புவதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஹைதிக்கும் கடந்த சில ஆட்டஙகளாக தொடர்ந்து பந்து வீசி வருகிறார்.

ரோஹித்துடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்போகிறார் என்கிற எதிரபார்ர்ப்பும் எழுந்துள்ளது. ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும்  இணைந்து ஆடவுள்ளதாகவும் தகவ கசிந்தது. தற்போது ஜெய்ஸ்வால் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

World Cup T20 team announcement who has more chances as a keeper

மேலும் அடுத்த தலைவலியாக விக்கெட் கீப்பர் தேர்வு பார்க்கப்படுகிறது. ரெகுலர் விக்கெட் கீப்பர் பண்ட் ஐபிஎல்-இல் ஆடினாலும் அவருடைய பேட்டிங்கில் ஏற்ற இறக்கங்கள் உள்ளதால், தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் தான் முதல் தேர்வாக பார்க்கப்படுவார் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. கே.எல்.ராகுல் அடந்த இரண்டு வருடங்களாக டி20 போட்டிகளில் ஆடவில்லையென்றாலும், அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு சேர்க்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடி வருவதால் அவரும் கருத்தில் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை - பெங்களூரு ஐபிஎல் போட்டியின் போது ரோஹித் , தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பை அணி தேர்வு உள்ளது. சிறப்பாக விளையாடு என்று தினேஷ் கார்த்திக்கிடம் கூறியதும் அதற்கு வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப், சாஹல், பிஷ்னோய் சேர்க்கப்படலாமெனவும் தகவல்கள் உலா வருகிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா தவிர்த்து சிராஜ், ஆவேஷ் கான், முகேஷ் குமார், அர்ஸ்தீப் சிங் ஆகியோரது பேரும் பரிசீலனையில் உள்ளதென பேசப்படுகிறது.

இந்நிலையில், ரோஹித், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஆகியோர் இன்று (ஏப்.30) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி 15 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.