Skip to main content

சீராக குறையும் கரோனா தொற்று... இதுவரை 73.05 கோடி பேருக்கு தடுப்பூசி!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

ரகத


இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சீராக குறைந்துவரும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. கடந்த சில நாட்களாக 40 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்துவந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் குறைந்துவருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,376 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனையில் இருந்து 32,198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். கரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 308 பேர் பலியாகியுள்ளார்கள்.

 

நாடு முழுவதும் இதுவரை 3.32 கோடி பேர் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3.23 கோடி குணமான நிலையில், நோய்த் தொற்று காரணமாக இதுவரை 4.42 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 3.91 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார்கள். நாடு முழுவதும் இதுவரை 73.05 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று (10.09.2021) ஒரேநாளில் 65 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்