இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை(04/09/2019) ரஷியா செல்லவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை செய்கிறார். அதனை தொடர்ந்து இந்தியா- ரஷியா இடையேயான 20- ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த சந்திப்பில் இரு நாட்டு உயரதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
![INDIA PM NARENDRA MODI- `RUSSIA VILADIMIR PUTIN MEET FOR TOMORROW](http://image.nakkheeran.in/cdn/farfuture/D9xA6nxAEWjjPQaxzttWnSvw3mBbXSbdzB2ZSqk_3g8/1567495187/sites/default/files/inline-images/modi_putin_1.jpeg)
அந்த கூட்டத்தில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு. அதேபோல் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, அதிபர் விளாடிமிர் புதினிடம் ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று (03/09/2019) டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ரஷியா செல்லும் முன் அமைச்சர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை செய்திருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.