Skip to main content

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.86 லட்சமாக உயர்வு!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

INDIA CORONAVIRUS PEOPLES 2.86 LAKHS MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE


இன்று (11/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,583- லிருந்து 2,86,579 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,745- லிருந்து 8,102 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206- லிருந்து 1,41,029 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,37,448 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
 


அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 94,041 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3,438 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

INDIA CORONAVIRUS PEOPLES 2.86 LAKHS MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE


அதேபோல் தமிழகத்தில் 36,841, டெல்லியில் 32,810, குஜராத்தில் 21,521, ராஜஸ்தானில் 11,600, மத்திய பிரதேசத்தில் 10,049, உத்தரப்பிரதேசத்தில் 11,610, ஆந்திராவில் 5,269, தெலங்கானாவில் 4,111, கர்நாடகாவில் 6,041, கேரளாவில் 2,161, புதுச்சேரியில் 127 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,996 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் 357 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்