Skip to main content

''புதுச்சேரி மக்களுக்கு இந்த உறுதியை தருகிறேன்''-தமிழிசை பேட்டி!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

"I give this assurance to the people of Puducherry" - Tamilisai interview!

 

புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் தாக்கல் அண்மையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கிய நிலையில், கருப்பு சட்டையில் வந்திருந்த திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ''புதுச்சேரியை பொறுத்தவரை எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கிறது. என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்பவர்களுக்கு  கரோனா நேரத்தில் இந்த மாநிலத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இரவு பகலாக பணியாற்றினேன் என்று தெரியும். சில நேரங்களில் சில நிர்வாக ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் வரலாம்.

 

நாம் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட சில கொள்கை முடிவுகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.  இவை எல்லாவற்றையுமே அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில மக்களுக்கு ஒரே ஒரு உறுதியை மட்டும் சொல்கிறேன். என்னை பொருத்தமட்டில் இந்த அரசாங்கம் மக்களுக்கு என்னென்ன நல்லவை செய்கிறதோ அது அனைத்திற்கும் நான் உறுதுணையாக இருப்பேன். வெள்ள நிவாரண நிதியாக இருக்கட்டும், நாகையில் திடீரென வெள்ளம் வந்துள்ளது அதற்கான நிவாரணத் தொகையாக இருக்கட்டும், முதியோர் பென்ஷனாக இருக்கட்டும். மக்களுக்கு என்ன திட்டமோ அதை உடனே நிறைவேற்ற அதற்கு கையெழுத்திடுவது, அதற்கு நிதி நிலைமையை சரியில்லை என்றால் நிதித்துறை அதிகாரியை கூப்பிட்டு, தலைமை அதிகாரியை கூப்பிட்டு இதை எப்படி உடனே சரி செய்யலாம் என்பது போன்ற பணியை தான் ஆற்றிக் கொண்டிருக்கிறேனே தவிர, எனது மனசாட்சிப்படி இவர்கள் எல்லாம் சொல்கின்ற அளவுக்கு எந்த விதத்திலும் மெத்தனமாக இல்லை'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.