Skip to main content

''புதுச்சேரி மக்களுக்கு இந்த உறுதியை தருகிறேன்''-தமிழிசை பேட்டி!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

"I give this assurance to the people of Puducherry" - Tamilisai interview!

 

புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் தாக்கல் அண்மையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கிய நிலையில், கருப்பு சட்டையில் வந்திருந்த திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ''புதுச்சேரியை பொறுத்தவரை எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கிறது. என்னை ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்பவர்களுக்கு  கரோனா நேரத்தில் இந்த மாநிலத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இரவு பகலாக பணியாற்றினேன் என்று தெரியும். சில நேரங்களில் சில நிர்வாக ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் வரலாம்.

 

நாம் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட சில கொள்கை முடிவுகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.  இவை எல்லாவற்றையுமே அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில மக்களுக்கு ஒரே ஒரு உறுதியை மட்டும் சொல்கிறேன். என்னை பொருத்தமட்டில் இந்த அரசாங்கம் மக்களுக்கு என்னென்ன நல்லவை செய்கிறதோ அது அனைத்திற்கும் நான் உறுதுணையாக இருப்பேன். வெள்ள நிவாரண நிதியாக இருக்கட்டும், நாகையில் திடீரென வெள்ளம் வந்துள்ளது அதற்கான நிவாரணத் தொகையாக இருக்கட்டும், முதியோர் பென்ஷனாக இருக்கட்டும். மக்களுக்கு என்ன திட்டமோ அதை உடனே நிறைவேற்ற அதற்கு கையெழுத்திடுவது, அதற்கு நிதி நிலைமையை சரியில்லை என்றால் நிதித்துறை அதிகாரியை கூப்பிட்டு, தலைமை அதிகாரியை கூப்பிட்டு இதை எப்படி உடனே சரி செய்யலாம் என்பது போன்ற பணியை தான் ஆற்றிக் கொண்டிருக்கிறேனே தவிர, எனது மனசாட்சிப்படி இவர்கள் எல்லாம் சொல்கின்ற அளவுக்கு எந்த விதத்திலும் மெத்தனமாக இல்லை'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.