Skip to main content

பரோலில் வந்து மனைவியை கொலை செய்த கணவன்; 4 பேர் கைது

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Husband who issue wife on parole; 4 arrested


புதுச்சேரி அனிதா நகரைச் சேர்ந்தவர் பிரபல தாதா கருணா. ஆயுள் தண்டனை கைதியான இவர் சிறையில் உள்ளார். இவரது தம்பி பாஸ்கர், இவரும் ஒரு கொலை வழக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு கைதாகி தண்டனை பெற்று வந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆண்டு நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

 

பாஸ்கரின் மனைவியான எழிலரசி கடந்த 9 ஆண்டுகளாக மாயமானார். இதுதொடர்பாக அவரது உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் எழிலரசியின் கணவர் பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் பரோலில் வெளியே வந்தபோது தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது நண்பர்களான பிரகாஷ், கருப்பு சரவணன், பாம் வேலு ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு காரிலேயே கழுத்தை நெரித்து கொலை செய்து வேல்ராம்பட்டு ஏரிக்கரை அருகே அவர் முன்பே தோண்டி வைத்திருந்த குழியில் புதைத்தது தெரிய வந்தது.

 

Husband who issue wife on parole; 4 arrested

 

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக புறவழிச்சாலை பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அதில் பீதியடைந்த பாஸ்கர், எழிலரசியை புதைத்த இடத்திற்குச் சென்று அவரது எலும்புக் கூடுகளை ஏரிக்கரையில் தூக்கி எறிந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து 4 பேரை கைது செய்த போலீசார், பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.