Skip to main content

மனைவியைக் காணவில்லை; அம்பலமான கொடூர கணவனின் நாடகம்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
husband who became a drama after incident his wife

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அஸ்வினி என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அஸ்வினி செல்போனில் பலருடன் பேசி வந்துள்ளார். மேலும் நண்பர்களுடன் வீடியோகாலில் பேசியும் வந்ததாகக் கூறப்படுகிறது.

இது கணவர் ரமேஷுக்கு தெரிய வர அஸ்வினியிடம்  இது குறித்துக் கேட்டுள்ளார். பின்பு இருவருக்கும் சண்டை வந்துள்ளது. நாளாக நாளாக இந்தச் சம்பவம் குறித்து இருவருக்கும் இடையே  அடிக்கடி  சண்டை வந்துள்ளது. இதனால் மன உளைச்சலிலிருந்த அஸ்வினி தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ரமேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஸ்வினியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின் இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்த நிலையில் ரமேஷ் தனது மனைவி அஸ்வினியை காணவில்லை என்று சன்னப்பட்டணா புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அஸ்வினியைத் தேடி வந்தனர். இந்த நிலையில்தான் ரமேஷின் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அஸ்வினி இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சன்னப்பட்டணா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஸ்வினியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவரம் தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது அதில் ரமேஷ் தனது மனைவியை அடித்துக்கொன்று அவரது உடலை தோட்டத்தில் வீசியது அம்பலமானது. இதையடுத்து பிடிபட்டுவிடுவோமோ என்று ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். தற்போது போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய வழக்கு; 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Forgery Case 7 people have been sentenced to court custody

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருணாபுரம் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மெத்தனால் ஆலை உரிமையாளர்களான பென்சிலால், கவுதம் லால் ஜெயின், மெத்தனாலை விநியோகம் செய்த சடையன், ரவி, செந்தில், ஏழுமலை ஆகிய ஆறு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதனால் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களிடம் இருந்து மெத்தனாலை வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. 

Forgery Case 7 people have been sentenced to court custody

இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கில் சென்னையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிவக்குமார்,  ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மெத்தனால் விநியோகம் செய்த சிவக்குமார், ஆலை உரிமையாளர் பென்சிலால், கவுதம் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். 

Next Story

கள்ளச்சாராய மரணம்; மேலும் 6 பேர் கைது

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
counterfeiting liquor; 6 more arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாபுரம் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பென்சிலால், சடையின், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதம் லால் ஜெயின் ஆகிய ஆறு பேரை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.