Skip to main content

இன்ஸ்டாகிராமில் பழகிய நபரை தேடிச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
That happened to the young woman who went looking for a person she met on Instagram!

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்கள் ஆன்லைனில் நண்பர்களாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையில், அந்த நபர் தான் ஒரு வங்கியில் பணியாற்றுகிறேன் என்றும் அந்த இளம்பெண்ணுக்கு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என்றும் கூறி உதவ முன்வந்துள்ளார்.  

அதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தின் தனபவன் பகுதிக்கு நேரில் வந்து சந்தித்தால் தான் வேலை வாங்கி தர முடியும் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பகுதிக்கு இளம்பெண் சென்று அந்த நபரைச் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர், அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து குளிர்பானம் ஒன்றைக் குடிக்க வைத்திருக்கிறார். 

இதனையடுத்து, அந்த பெண்ணை ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்று அழைத்து சென்று அந்த நபரும் மற்றும் அவருடைய நண்பரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மூலம் பழகிய நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தந்தை, மாமா, சகோதரனால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
13-year-old girl incident happened by father, uncle, brother at madhya pradesh

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், குட் டச், பேட் டச் பற்றி பாடம் நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பள்ளியில் பயின்று வரும் 13 வயது பெண் குழந்தை தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி பயிற்சி நடத்துபவரிடம் தெரிவித்துள்ளார். 

அதில் அந்தச் சிறுமி தனது தந்தை, தூரத்து உறவினர் முறையிலான சகோதரன் மற்றும் மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிறுமி அவரது தூரத்து உறவினர் முறையிலான சகோதரனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெளியே சொன்னால், சிறுமியைக் கொலை செய்துவிடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார்.  அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 2024ஆம் ஆண்டு சிறுமி அவரது மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிறுமி அவரது தந்தையால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 13 வயது சிறுமி தொடர்ச்சியாக தனது சொந்த குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இரக்கமின்றி பெண்ணை தடியால் அடித்த கும்பல்; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
The gang beat the woman mercilessly in madhya pradesh

பொதுவெளியில் பெண் ஒருவரை, அடையாளம் தெரியாத நபர் தடியால் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில், இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவில், நான்கு பேர் கொண்ட கும்பல், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு ஆண், ஒரு தடியால் தொடர்ந்து அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்குகிறார். இந்தச் சம்பவத்தை அங்குள்ள மற்ற சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுக்கின்றனர். இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், ‘தெரியாத ஆண் ஒரு பெண்ணை அடிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோ வைரலானவுடன், எனது குழுவினர் இந்த விஷயத்தை அறிந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியை நாங்கள் கண்டுபிடித்தோம். முக்கிய குற்றவாளி கோக்ரி நிர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், வீடியோவில் காணப்படும் மற்ற நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.