Skip to main content

குறைந்த விலை வீடுகளுக்கான விலை உச்சவரம்பு அதிகரிப்பு... ஜி.எஸ்.டி. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு...!

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 8 சதவீதத்திலிருந்து இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி 33 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. 
 

GST

 

மும்பையில் 18.12.18 அன்று நடந்த ரிபப்ளிக் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 99 சதவீத பொருட்கள், அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதமும் 18 சதவீதம் அல்லது அதற்கும் கீழ் கொண்டுவர அரசு விரும்புகிறது என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், இனிமேல் ஆடம்பர பொருட்கள் மட்டும் 28 சதவீத ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
 

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி 31-வது ஜிஎஸ்டி கவுன்சி கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. அதில், 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28% இருந்து 18 % ஆக குறைத்தும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% இருந்து 5% ஆக குறைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
 

அப்போதே வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரியும் விரைவில் குறைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ரியல் எஸ்டேட் மீதான வரிவிதிப்பு பற்றிய விவாதம் நடந்தது. அதில், வாங்கத்தக்க வீடுகளுக்கான (குறந்த விலை) ஜி.எஸ்.டி வரி 8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும், அதிக மதிப்புள்ள வீடுகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.


குறைந்த விலை வீடுகளுக்கான விலை வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.20 இலட்சம் மதிப்புள்ள வீடுகள், குறைந்த விலை வீடுகள் எனக் கருதப்பட்டது. இது தற்போது ரூ.45 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ நகரங்களிலும், பிற நகரங்களிலும் குறைந்த விலை வீடுகள் எனும் கணக்கில் ரூ.45 இலட்சம் வரை உள்ள வீடுகள் அடங்கும். 
 

அதேபோல் பரப்பளவு அளவில் மெட்ரோ நகரங்களில் உள்ள வீடுகள் 60 சதுர மீட்டர் பரப்பளவும், பிற நகரங்களில் 90 சதுர மீட்டர் பரப்பளவும் கொண்ட வீடுகள் குறைந்த விலை வீடுகளாக கருதப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

தற்போது வாங்கத்தக்க வீடுகளுக்கான வீடுகளுக்கு ஜி.எஸ்.டி வரி 8 சதவீதமாகவும், அதிக மதிப்புள்ள வீடுகளின் ஜி.எஸ்.டி வரி விகிதம் 12 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அறிவித்திருக்கும் புதிய ஜி.எஸ்.டி வரி விகிதம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

“ஜி.எஸ்.டி: வரி அல்ல… வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
GST Not a tax a waybust says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஜி.எஸ்.டி.: வரி அல்ல… வழிப்பறி’ எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்’ என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டியைப் பார்த்து காப்பர் சிங் டேக்ஸ் (Gabbar Singh Tax) எனப் புலம்புகின்றனர்!. 

GST Not a tax a waybust says CM MK Stalin

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.