Skip to main content

கேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்!!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
marriage incident in kerala

 

திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியை சோ்ந்தவா்கள் பிரேம்குமாா்- ரமாதேவி தம்பதிகள். குருவாயூா் கிருஷ்ணன் பக்தரான இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாததால் கிருஷ்ணனிடம் முறையிட்டு வணங்கி வந்தனா். இந்த நிலையில் அவா்களின் ஆசைக்கும் நம்பிக்கைக்கும் பலனாக ரமாதேவியின் ஒரே பிரசவத்தில் 1995 நவ.18- ம் தேதி 5 குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு ஆண் 4 பெண்கள் பஞ்சரத்தினங்கள் பிறந்து விட்டது என கூறி அந்த தம்பதியினா் ஆனந்தமடைந்தனா்.

உத்திரம் நட்சத்திரத்தில் அந்த 5 குழந்தைகளும் பிறந்ததால் ஆண் மகனுக்கு உத்ரஜன் என்றும் பெண் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா என பெயாிட்டனா். ஒரே பள்ளி கல்லூாியில் சோ்த்து படிக்க வைத்தனா். அந்த ஊரே பஞ்சரத்திரன குழந்தைகள் என அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறு பெட்டி கடை நடத்தி வந்த பிரேம்குமாா் சாியான வருமானம் இல்லாததால் கடன் ஏற்பட்டு அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாா். அப்போது அந்த குழந்தைகளுக்கு 9 வயது.

இதனால் அந்த குழந்தைகளின் எதிா்காலத்தை நினைத்து அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது. இந்த நிலையில் லோக்கல் அரசியல்வாதி ஒருவாின் முயற்சியில் தாயாா் ரமாதேவிக்கு அரசு கூட்டுறவு துறையில் வேலை கிடைத்தது. ரமா தேவி கஷ்டப்பட்டு அந்த குழந்தைகளை படிக்க வைத்து திருமணம் வயது வரை ஆளாக்கினாா். மேலும் ஏற்கனவே ஆரம்பத்தில் நினைத்தப்படி 5 குழந்தைகளுக்கு ஒரே நாளில் ஒரே மேடையில் அதுவும் குருவாயூா் கோவிலில் வைத்து தான் திருமணம் என முடிவு செய்து வரன் தேடினாா்.

 

marriage incident in kerala


அவா் நினைத்த படி 5 பேருக்கும் வரன் கிடைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் 5 பேருக்கும்  திருமணம் நடக்க இருந்த நிலையில் கரோனா தாக்கத்தால் திருமணம் தடைப்பட்டது. இதனால் நவ.26-ம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் மகனுக்கு வரன் சில பிரச்சினைகளால் மாறியது. இதனால் 4 மகளுக்கும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தாா். ஃபேஷன் டெக்னாலஜி முடித்த உத்ராவுக்கு மஸ்கட்டில் வேலை பாா்க்கும் ஆயூரை சோ்ந்த அஜின், ஆன்லைன் ஊடக பிாிவு செய்தியாளா் உதாராவுக்கு கோழிக்கோடு சோ்ந்த பத்திாிக்கையாளா் மகேஷ், திருவனந்தபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசியன் உத்தமாவுக்கு மஸ்கட்டில் வேலை பாா்க்கும் வட்டியூா்காவை சோ்ந்த வினீத் ஆகிய 3 பேருக்கு மட்டும் அன்று திருமணம் நடந்தது.

எா்ணாகுளத்தில் அமிா்தா மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசனாக இருக்கும் உத்ரஜாவுக்கு பேசி முடிக்கப்பட்ட குவைத்தில் ஒரு மருத்துவமனையில் மயக்கவியல் டெக்னீசனாக இருக்கும் பத்தணம்திட்டையை சோ்ந்த ஆகாஷ்க்கு கரோனா சூழ்நிலையால் ஊருக்கு வர விசா கிடைக்காததால் இவா்களின் திருமணம் மட்டும் தடைபட்டது.  இந்த திருமணத்தில் உறவினா்களை விட இந்த பஞ்சரத்தினம் குழந்தைகளை கேள்வி பட்டவா்கள் அதிகம் போ் கலந்து வாழ்த்தினாா்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.