Skip to main content

கட்டாய திருமணத்தால் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்... ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி...

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

Girl who fled home to avoid marriage cracks UP PCS exam

 

 

கட்டாய திருமணத்தைத் தவிர்க்க வீட்டைவிட்டு வெளியேறிய பெண், ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று வீடு திரும்பிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த சஞ்சு ராணி வர்மா என்பவர், தனக்கு நடக்கவிருந்த கட்டாய திருமணத்தை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த 2013 ல் சஞ்சுராணியின் தாயார் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் சஞ்சுராணிக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க முயன்றுள்ளனர். ஆனால், திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாத சஞ்சுராணி, வீட்டிலிருந்து வெளியேறி டெல்லியில் குடியேறியுள்ளார். படிப்பதற்கு பணமும், குடும்பத்தினரின் ஆதரவும் இல்லாத சஞ்சுராணி பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, அதன்மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தனது பட்டப்படிப்பை முடித்ததோடு, சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராகி வந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்ற அவர் தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றிபெற்று உத்தரப்பிரதேச வணிகவரித்துறை அதிகாரியாக தனது வெற்றிக்கு அவர் திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "நான் 2013 ல் என் வீட்டை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், எனது படிப்பையும் கூட விட்டுவிட்டேன். என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. பின்னர் நான் குழந்தைகளுக்கு டியூஷன் கற்பிக்க ஆரம்பித்தேன். தனியார் பள்ளிகளில் பகுதிநேர கற்பித்தல் வேலையும் கிடைத்தது. இவற்றின் மூலம் எனது சிவில் சர்வீஸ் தயாரிப்பை தொடர முடிந்தது

 

என் அம்மா காலமான பிறகு, திருமணம் செய்து கொள்ளும்படி என் குடும்பம் என் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. எனது கனவைப் பற்றி அவர்களுக்கு விளக்க முயன்றேன், ஆனால் அனைத்தும் வீணானது. எனவே, நான் சொந்தமாக வாழ முடிவு செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மனைவி வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; பதறி அடித்து போலீசிடம் ஓடிய கணவர்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The husband ran to the police in panic for Whatsapp status by wife

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்து போன மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், அவர் நிரந்தரமான விவாகரத்து கேட்டும் வந்துள்ளார். இதனிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக மனைவி வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு, மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும், மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே தகராறுக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கோபமடைந்த மனைவி, தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‘என்னுடைய கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த விவரம் கணவருக்கு தெரியவர, பதறி அடித்து போன அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும், இந்த தம்பதிகள் மாறி மாறி அளித்த புகார்கள் மீது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், இந்த முறை பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர்கள், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.