Skip to main content

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தனியார் ரயில்... பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

For the first time in the country, a private train in Tamil Nadu ... Do you know the fare?

 

கோவையில் இருந்து நேரடியாக சீரடிக்கு தனியார் பங்களிப்புடன் நாளை (14/06/2022) முதல் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், இந்த ரயிலில் அப்படி என்ன ஸ்பெஷல்? ரயில் பயணத்திற்கான கட்டணம் என்ன? போன்ற விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

 

மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான, ரயில்வே துறையில் இனி ரயில்களை வாடகைக்கு எடுக்கலாம் என அறிவித்து, கடந்த நவம்பர் மாதம் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தது இந்தியன் ரயில்வே துறை. 'பாரத் கவுரவ்' என்று அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தின் நோக்கம், தனியார் பங்களிப்புடன் சுற்றுலாவைப் பிரபலப்படுத்துவது தான். வாடகைக்கு ரயிலை எடுப்பதின் மூலம் டிக்கெட் கட்டணத்தை சுற்றுலா ஆப்ரேட்டர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் ஆஃபர். 

 

அதிலும், ஆன்மீக பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆக அமையவிருக்கிறது இந்த சிறப்பு ரயில்வே திட்டம். அந்த வகையில் கோவையில் இருந்து சீரடிக்கு வாராந்திர ரயில் சேவை நாளை (14/06/2022) முதல் தொடங்கவிருப்பது சாய்பாபா பக்தர்களை மகிழ்வித்துள்ளது. 

 

அதுவும், இந்த ரயில் சேவை ஆந்திர மாநிலம் வழியாக வழியாக மகாராஷ்டிரா செல்லவிருப்பதால், சாய்பாபாவோடு சேர்த்து ஆந்திராவில் உள்ள ராகவேந்திரா சுவாமி கோயில் அமைந்துள்ள மந்திராலயத்திற்கும் பக்தர்கள் சிரமமின்றி சென்று வர முடியும். இப்படி ரிலாக்ஸாக சாய்பாபாவைச் சென்று தரிசித்து வர ரயில் கட்டணம் மற்றும் பேக்கேஜ் கட்டணம் என இரண்டு விதமான கட்டணங்கள் உள்ளன. 

 

பேக்கேஜ் என்பது கோவையில் இருந்து சீரடிக்கு சென்று திரும்பும் ரயில் கட்டணத்துடன் சேர்த்து, சீரடியில் சிறப்பு தரிசனம், மூன்று பேர் தங்கும் ஏசி ரூம் வசதி, டூர் வழிகாட்டி மற்றும் பயண இன்சூரன்ஸ் ஆகியவை அடங்கும். ஆனால் உணவு மற்றும் ஆந்திராவில் உள்ள மந்திராலயம் கோயிலில் தரிசிக்க வேண்டும் என்றால், அதற்கு தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். 

 

கோவை- திருப்பூர்- ஈரோடு- சேலம்- பெங்களூரு- மந்திராலயம் வழியாக சீரடி செல்லும், இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் பெறுவது மிகவும் சுலபம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து சாய்பாபா கோயில்களிலும் பயண டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

 

தனது முதல் பயணத்திற்கு ஆயத்தமாகியுள்ள கோவை டூ சீரடி ரயில் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு மேற்கொண்டார். 

 

இந்த ரயிலில் பயணிக்க செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்துப் பார்ப்போம்! 

ரயில் கட்டணமாக ஸ்லீப்பருக்கு ரூபாய் 2,500, மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 5,000, இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 7,000, முதல் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 10,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேக்கேஜ் கட்டணமாக, ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்க ரூபாய் 4,999, மூன்றாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 7,999, இரண்டாம் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 9,999, முதல் வகுப்பு ஏசியில் பயணிக்க ரூபாய் 12,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.