Skip to main content

முதல் மக்களவை முதல் 16-வது மக்களவை வரை பெண்களின் பங்களிப்பு !

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

இந்தியாவில் வாழும் பெண்கள் அனைவருக்கும் கல்வி , வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் 33% இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வர வேண்டும் என பல்வேறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உதாரணமாக 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் மக்களவையில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களில் சுமார் 179 பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ஒவ்வொரு மக்களவையிலும் அங்கம் வகித்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம்.

 

woman 1



1. முதல் மக்களவை "First Lok sabha" (1952) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 24 பேர் மட்டுமே ஆகும்.

2.இரண்டாம் மக்களவை "2nd Lok sabha" (1957) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 24 பேர் மட்டுமே ஆகும்.

3. மூன்றாவது மக்களவை "3rd Lok sabha"  (1962-1967) ஆம் ஆண்டு இடம் பெற்ற பெண் உறுப்பினர்கள் 37 பேர் மட்டுமே ஆகும்.

4. நான்காவது மக்களவையில் "4th lok sabha" 33 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.

5. ஐந்தாவது மக்களவையில் "5th Lok Sabha" 28 பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.

6. ஆறாவது மக்களவையில் "6th Lok sabha" 21 பெண் உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

7. ஏழாவது மக்களவையில் "7th lok sabha" (1980-1984)  32 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

8. எட்டாவது மக்களவையில் "8th Lok Sabha"  (1984-1989) 45 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

9. ஒன்பதாவது மக்களவையில் " 9th lok sabha" (1989) 28 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

10.  10-வது மக்களவையில் "10th Lok Sabha" (1991-1996) 42 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

11. 11 - வது மக்களவையில் "11th Lok Sabha"  41 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

12. 12- வது மக்களவையில் "12th Lok Sabha" 44 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

13. 13-வது மக்களவையில் "13th Lok sabha" 52 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

14. 14-வது மக்களவையில் "14th Lok Sabha" 52 பெண் உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

15. 15-வது மக்களவையில் " 15th Lok Sabha" (2009-2014) 64 உறுப்பினர்கள் மக்களால் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

16. 16-வது மக்களவையில் "16th Lok Sabha" (2014-2019) 66 உறுப்பினர்கள் அதிகப்பட்சமாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

woman



இந்திய வரலாற்றில் முதன் முறையாக 15-வது மக்களவையில் மக்களவை சபாநாயகராக திருமதி . மீரா குமார் பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக 16-வது மக்களவையில் மக்களவை சபாநாயகராக திருமதி . சுமித்ரா மகாஜன் பதவியேற்றார்.எனினும் மாநிலங்களவையில் பெண் உறுப்பினர் சபாநாயகர் பதவியில் அமர்ந்தது இல்லை. 

 

woman



காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு மக்களவை தேர்தலிலும் தங்களது தேர்தல் அறிக்கையில் ( 2009, 2014) மத்தியில் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியளித்தது. 2009 -ல் மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கூட்டணி பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தவறிவிட்டது. இருப்பினும் 2019- மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தால் மீண்டும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளது. 

2014- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கட்சி தங்கள் மத்தியில் ஆட்சி அமைந்தால் கட்டாயம் பெண் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவித்த நிலையில் , இந்த மசோதாவை நிறைவேற்ற தவறிவிட்டது தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு. மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சிகள் 1999, 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிச்சயம் பெண் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் வாக்குறுதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில் இந்திய ஒர் ஜனநாயக நாடு என்பதை உறுதிப்படுத்தவும் , அதற்கு மேலும் வலுவூட்டவும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா வரும் காலங்களில் மிக அவசியமானது என்றால் எவராலும் மறுக்க முடியாது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.