Skip to main content

நகைக்கடையில் 12 பவுனை நூதனமாகத் திருடிய பெண் ஊழியர்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Female employee steals  jewelry from a jewelry shop!

 

புதுச்சேரி லூயி பிரகாசம் வீதியில் வசிப்பவர் தேவநாதன் (வயது 49). இவர், பாரதி வீதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் ஒரு ஆண்டாக கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி திவ்யா (வயது27) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் அவ்வப்போது கடையிலிருந்த நகைகளை சுத்தம் செய்வது போல் சிறிய சிறிய நகைகளை எடுத்து அவற்றை வேஸ்ட் பேப்பரில் சுற்றி வெளியே வீசுவது போல் வீசி, வீடு திரும்பும்போது வீட்டிற்கு எடுத்துச் சென்று அவற்றை தனது கணவரிடம் கொடுத்து அடமானம் வைத்து குடும்ப செலவுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வேஸ்ட் பேப்பர் போர்வையில் மட்டுமின்றி சுடிதார், சேலைகளிலும் மறைத்து சிறிய முடிச்சுப்போட்டு நகையை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது.

 

சமீபத்தில் தனது கடையில் இருந்த நகைகளை தேவநாதன் எடை வாரியாக சரி பார்த்தபோது 12 பவுன் நகைகளும் 400 கிராம் வெள்ளி பொருட்களும் குறைவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது திவ்யா இதுபோன்ற நூதனமாக நகைகளை திருடிச் செல்வதை கண்டுபிடித்த தேவநாதன், திவ்யாவை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.


பின்னர் திவ்யாவிடமும் அவரது கணவரிடமும் திருடிச் சென்ற நகைகளை உடனடியாக திருப்பி கொடுத்து விடுமாறு கேட்டுள்ளார். அவர்களோ குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்தால் அடமானத்தில் உள்ள அனைத்து நகைகளையும் திருப்பித் தந்துவிடுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நகையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.


இதையடுத்து நகை திருட்டு போன சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் நகைக் கடை உரிமையாளர் தேவநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே தலைமறைவாகிவிட்ட தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.