Skip to main content

38 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறல்... ஃபேஸ்புக் பதிவால் சிக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர்!  

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

etired teacher caught on Facebook post!

 

38  ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஒருவர் பள்ளியில் படித்த மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு பதிவின் மூலமாக அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருப்பவர் சசிகுமார். இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். சுமார் 38 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்த இவர் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.  'ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்த நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்' என ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சசிகுமார், தான் ஓய்வுபெற்று விட்டதாக அவர் போட்டிருந்த ஃபேஸ்புக் பதிவை பார்த்த அவரிடம் பயின்ற முன்னாள் மாணவிகள் பள்ளிப் பருவத்தில் தாங்கள் ஆசிரியர் சசிகுமாரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகக் கருத்து தெரிவித்தனர்.

 

இந்த ஃபேஸ்புக் பதிவுகள், கமெண்ட்டுகள் வைரல் ஆன நிலையில் முன்னாள் மாணவிகள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சசிகுமார் மீது மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேபோல் சசிகுமாரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான 2 மாணவிகள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கங்களை அளித்தனர். அதில், 'அவர் ஆசிரியராக இருந்தபோதும், தலைமை ஆசிரியராக இருந்தபோதும் அவர் பள்ளியில் பயின்ற பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். பாலியல் அத்து மீறல்கள் தொடர்பாக பள்ளியில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளிடம் புகார் அளித்த நிலையிலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் மாணவிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சசிகுமார் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் சசிகுமாரை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர்.