
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.21 மணியளவில் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து 9.12 மணியளவில் மீண்டும் நிக்கோபாரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இதன்பிறகு 9.13 மணியளவில் மீண்டும் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனை நிலஅதிர்வியலுக்கான தேசிய மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.