Skip to main content

"குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் ரூபாய் 2,000 செலுத்தப்படும்"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

புதுச்சேரி சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சட்டமன்ற கூட்டம் இன்று (30/03/2020) கூடியது. சட்டமன்றத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க எம்.எல்.ஏக்களின் இருக்கைகள் இடைவெளிவிட்டு மாற்றியமைக்கப்பட்டிருந்தன. அதேசமயம் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் புதுச்சேரி அரசு அலட்சியமாகச் செயல்படுவதாகவும், புதுச்சேரியில் கிருமி நாசினிகள் கூட தெளிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி புதுச்சேரி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு முகக்கவசம் அணிந்து கிருமி நாசினி தெளித்து கொண்டே சட்டமன்றத்துக்குள் வந்தனர். இடைவெளி விட்டு போடப்பட்ட இருக்கைகளை அ.தி.மு.க- பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மறுத்து நாற்காலிகளை ஒன்றாக்கி அமர்ந்தனர்.

each ration card rs 2000 puducherry cm narayanasamy

கூட்டம் தொடங்கியதும் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து இரங்கல் குறிப்பு வாசித்தார். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அவையில் எம்.எல்.ஏக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2020 ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கான ரூபாய் 2,042 கோடி நிதிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் கரோனாவை முற்றிலும் தடுக்க 995 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், நாளை (31/03/2020) முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கரோனா வாழ்வாதார நிதி 2000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.  

each ration card rs 2000 puducherry cm narayanasamy

முன்னதாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும், நோய்த் தடுப்பு நடவடிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை என்றும், இதுதொடர்பாக அ.தி.மு.க பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதம் செய்ய அனுமதிக்காததைக் கண்டித்தும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா, பாஸ்கர் உள்ளிட்ட நான்கு பேரும் சபாநாயகரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆளும் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது சபாநாயகர் சிவக்கொழுந்து,‘சட்டமன்ற மாண்பைக் காப்பாற்ற உறுப்பினர்கள் தவறினால் வெளியேற்றப்படுவார்கள்’என எச்சரிக்கை விடுத்தார். அதையடுத்து மக்கள் உயிர் பிரச்சனை பற்றி அவையில் விவாதிக்காததை கண்டித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

each ration card rs 2000 puducherry cm narayanasamy

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், “கரோனா வைரஸ் காய்ச்சல் சம்மந்தமாக சரியான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதுவரை இந்த அரசு எடுக்கவில்லை. மேலும் அரசு ரூ.2000ஐ அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் என்று கூறியது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. தற்போது புதுச்சேரியில் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முகமூடி கூட வழங்க வில்லை. ஆதலால் நாங்கள் வெளிநடப்புச் செய்தோம்" என்றார்.

ஆனால் கரோனா பீதியில் மக்கள் இருக்கும் நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகப் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் அறிவித்தது. இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டம் 10.00 மணிக்கு தொடங்கி 11.00 மணிக்கு ஒரு மணி நேரத்தில் முடிந்தது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.