Skip to main content

அரசு பணியிலிருந்து டிஸ்மிஸ், 77 நாட்கள் சிறை... இளம் பெண் வாக்கு மூலத்தால் ஜாமீன்...!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

Dismissed from government service, jailed for 77 days ... Bail by young woman source ...!

 

 

கேரளாவில் கரோனா பாதித்த 3 பெண்களை பாலியியல் தொந்தரவு செய்த இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் ஒரு ஆண் நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கபட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த நேரத்தில் கொல்லம் மாவட்டம் குளத்துபுழா ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் பிரதீப்குமாரிடம் கரோனா நெகடிவ் சான்றிதழ் வாங்கச் சென்ற இளம் பெண்ணிடம் பாங்கோடு அருகே பரதன்னூாில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்தால் சான்றிதழ் தருவதாக கூறியதால் அங்குச் சென்ற அந்த இளம்பெண்ணை பிரதீப்குமாா் கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

 

இதனையடுத்து அந்த இளம் பெண் குளத்துபுழா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விஷயம் முதல்வர் பினராய் விஜயனின் கவனத்துக்கு சென்றதால் பிரதீப்குமாா் அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யபட்டதோடு போலீசாரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த நிலையில், பிரதீப்குமாா்  ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யபட்டதில் மூன்று முறை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அந்த இளம் பெண் நீதிமன்றத்தில் பிரமாண வாக்கு மூலம் ஓன்றை தாக்கல் செய்தாா். அதில் நானும் பிரதீப்குமாரும் பரஸ்பரமாக ஒருத்தருக்கு ஒருத்தர் விருப்பத்தோடுதான் உறவு வைத்து கொண்டோம். இதில் என்னுடைய உறவினர்களின் சதி திட்டத்தால் அவர்களின் நிர்பந்தத்தால்தான் நான் அவா் மீது புகார் கொடுத்தேன் என்றார்.

 

இதனையடுத்து தொடர்ந்து 77 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு இன்று (24-ம் தேதி) நீதிமன்றம் பிரதீப்குமாருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் பிரதீப்குமாாின் பணி டிஸ்மிஸை அரசு பாிசீலனை செய்ய வேண்டும் என்றும் சாியான விசாரணை மேற்கொள்ளாமல் காவல்துறை  நடவடிக்கை எடுத்ததால் போலீஸ் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.