Skip to main content

“ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” - அரசின் மீது முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

"Didn't keep a single promise" - former chief minister accuses the government

 

புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் அருகில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் எம்.பி வைத்தியலிங்கம், முன்னாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிலிண்டருக்கும், காய்கறிக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செய்து நூதனப் போராட்டம்  நடத்தப்பட்டது.

 

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி ஒன்று கூட நிறைவேற்றவில்லை. 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து ரூ. 15 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் ரூ. 45 லட்சம் கோடி கடனாக வாங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 19 சதவீதம் பேர் தான் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர். ஆனால், தற்போது 40 சதவீதத்துக்கும் மேல் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.

 

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி அரசில் மக்களுக்கான எந்த திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்னால் சட்டமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது” என்று கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒருவர் தவறு செய்தால் ஒட்டுமொத்த துறையையும் குறை கூறுவதா” - ஆளுநர்  தமிழிசை

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“If one person makes a mistake, blame the whole department” - Governor Tamil Nadu
கோப்புப் படம் 

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இன்று புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆளுநர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், அமலாக்கத்துறை பா.ஜ.க., லஞ்ச ஒழிப்புத்துறை பா.ஜ.க. என திமுகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படியெனில் தமிழக காவல்துறையை திமுக எனக் குறிப்பிடலாமா? தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது. உடனே எல்லா அமைச்சர்கள் வீட்டிற்கும், முதலைமைச்சர் வீட்டிற்கும் சென்று ரெய்டு நடத்துவேன் என்று அதிகாரிகள் கூறினார்களா?

 

அதுபோல்தான் இதுவும், அமலாக்கத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக அந்தத் துறையில் இருப்பவர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குவார்கள். அந்தத் துறையே கறை பிடித்திருக்கிறது என்று எப்படி கூறமுடியும்? அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. இப்படி இருக்கையில், இந்தத் துறையின் அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்துவோம் என மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கூறுகிறது எனில், இது தவறான முன்னுதாரணம்” என்று தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி’ - புயலுக்கு வாய்ப்பா?

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Strengthened Low Pressure Area Chance of heavy rain

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நகர்ந்து நாளை (30.11.2023) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். அதற்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 'மிக்ஜாம்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (29.11.2023) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்