Skip to main content

“கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தபோது ரங்கசாமி வாய் திறந்தாரா...” - நாராயணசாமி கேள்வி

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

'Did Rangasamy open his mouth when Kiranbedi gave us trouble?'-Narayanasamy asked

 

'கையோடு கை கோர்ப்போம்; புதிய ஒற்றுமை பயணம்' என்ற தலைப்பில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது.

 

இந்த பேரணிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி பேசுகையில், “தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில் விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் நலத் திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டம், இளைஞர்கள் வளர்ச்சி போன்றவைகளுக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த முக்கியமான திட்டம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம். இதனால் அவர்களது வாழ்க்கை தரம் உயரும் என்று சொன்னார்கள். அந்த வாக்குறுதி இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்காக இந்தாண்டு பட்ஜெட்டில் 7,000 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள்.

 

ஆகவே குடும்ப தலைவிகள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பெற்று சிறப்பாக தங்களுடைய குடும்பத்தை நடத்துவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசு மத்திய அரசு உதவி இல்லாமல் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தினாலும் கூட மாநிலத்தினுடைய வருவாயைப் பெருக்கி ஒரு சிறப்பான பட்ஜெட்டை தமிழக முதல்வர் தாக்கல் செய்திருக்கிறார். நான் புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் போது எனக்கும் என்னுடைய அமைச்சர்களுக்கும் கிரண்பேடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அப்பொழுது ரங்கசாமி வாயை மூடிக்கொண்டு இருந்தார். குரல் கொடுக்கவில்லை. இப்பொழுது புலம்புகிறார். எனக்கு அதிகாரம் இல்லை; நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று புலம்புகிறார்.

 

நாங்களாவது மாற்று ஆட்சி. மத்தியில் பாஜக ஆட்சி, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி. மத்திய அரசு நாங்கள் சொன்னதற்கு செவி சாய்க்கவில்லை. ஆனால் இப்பொழுது கூட்டணி ஆட்சி. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணியிலிருந்தும் முதலமைச்சர் புலம்புகிறார் என்றால் அவருக்கு தெம்பு கிடையாது திராணி கிடையாது. அதனால் தான் புலம்புகிறார்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.