Skip to main content

இறுதி நேரத்தில் தொய்வு; பரபரப்பில் உத்தரகாசி

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Delay in closing time; Uttarakhand is in a frenzy

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.

 

மீட்புப் பணிகளில் 11வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் உள்ளே உள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்தநிலையில் இறுதிக் கட்டப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. சுரங்கப்பாதையின் மேலே இருந்து செங்குத்தாக துளையிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கம்பி போன்ற பொருள் குறுக்கே இருப்பதால் எந்த உபகரணத்தை கொண்டு அகற்றலாம் என மீட்புக் குழு மீண்டும் ஆய்வு செய்து வருகிறது. 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினரின் ஆய்வுக்கு பின் மீண்டும் துளையிடும் பணி தொடங்கும். அதன் பின்னரே உள்ளே இருப்பவர்கள் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்தத் தொய்வு அங்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“19 வயதில் தியாகத்தைப் புரிந்துகொண்டேன்” - பிரியங்கா காந்தி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Priyanka Gandhi questioned How much longer will you blame the Congress

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகம், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ராம்நகர் பகுதியில் இன்று (13-04-24) காங்கிரஸ் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நீங்கள் (பாஜக) எவ்வளவு காலம் காங்கிரசை குற்றம் சாட்டுவீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளனர்; இப்போது அவர்கள் 400 மேல் வெற்றி பெறுவோம் என்று சொல்வதால், அவர்களுக்கு பெரும்பான்மை வேண்டும். கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

எதுவும் நடக்கவில்லை என்றால், உத்தரகாண்டில், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்கள் மற்றும் எய்ம்ஸ்கள் ஆகியவை எப்படி வந்திருக்கும்?. சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. ஜவஹர்லால் நேரு இதை உருவாக்கவில்லை என்றால், இது சாத்தியமா?

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றைப் பயன்படுத்தித் தலைவர்களை தங்கள் கட்சிக்குக் கொண்டு வந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் அவர்கள் மும்முரமாக இருப்பதால் வேலைவாய்ப்பையும் பணவீக்கத்தையும் மறந்துவிட்டார்கள். அப்போது, ​​தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டதும், நன்கொடை பெற்று வியாபாரம் செய்வது குறித்து பிரச்சனை எழுந்தது. இப்போது சொல்லுங்கள் யார் ஊழல்வாதி என்று.

எனது 19 வயதில், என் தந்தையின் சிதைந்த உடலை என் தாய் முன் வைத்தபோது, நான் தியாகத்தைப் புரிந்துகொண்டேன். அவர்கள் என் குடும்பத்தாரை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்தாலும், என் தியாகி தந்தையை அவமதித்தாலும், எங்கள் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். எங்கள் இதயங்களில் இந்த நாட்டின் மீது நம்பிக்கையும், உண்மையான பக்தியும் இருப்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கல்குவாரியில் விழுந்த தொழிலாளி சடலமாக மீட்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
A worker who went to bathe in Calquary died

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அடுத்த பொன்னாச்சி பகுதியைச் சேர்ந்தவர் புட்டப்பா (50). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பெஜிலட்டி பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் கல் சைனிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பருடன் அதேப்பகுதியில் உள்ள மற்றொரு கல்குவாரியில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நீரில் மூழ்கினார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் உடனடியாக இது குறித்து கல்குவாரியில் உள்ள மேலாளர் இடம் தகவல் தெரிவித்தார். பர்கூர் போலீசாரும், அந்தியூர் தீயணைப்பு  வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் புட்டப்பாவை தேடினர். இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று 2 -வது நாளாக தேடும் பணி நடந்தது. அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை புட்டப்பா உடல் மீட்கப்பட்டது.இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.