Skip to main content

வெளியான மகளின் ஆபாச காணொலி; தட்டிக் கேட்ட ராணுவ வீரர் அடித்துக் கொலை

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Daughter's video released; A soldier incident in Gujarath

 

சொந்த மகளின் ஆபாச காணொலியை வெளியிட்ட நபர்களை தட்டிக் கேட்ட ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பான கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சக்லஸி என்ற கிராமத்தில் இராணுவ எல்லை பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி வரும் இராணுவ வீரரின் மகளுடைய ஆபாச காணொலியை அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இது நிகழ்ந்த நிலையில் இதனை அறிந்த சிறுமியின் தந்தையான அந்த ராணுவ வீரர் அந்தச் சிறுவனின் வீட்டிற்குச் சென்று கண்டித்துள்ளார். அப்பொழுது சிறுவனின் குடும்பத்தார் மற்றும் சிறுவனின் ஆதரவு கும்பல் இராணுவ வீரரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

Daughter's video released; A soldier incident in Gujarath

 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவானார்கள். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஏழு பேரில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகளின் ஆபாச காணொலியை வெளியிட்டது தொடர்பான பிரச்சனையில் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.