Skip to main content

காளைகளுக்கு எச்சரிக்கை விடுத்த பங்குச்சந்தைகள்! ஆனாலும் பயப்பட வேண்டாமாம்...!!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

coronavirus issues investors mumbai sensex, nifty details

 

நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் நிப்டி 14,000 புள்ளிகளையும், சென்செக்ஸ் 48,000 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சம் தொட்டிருந்தன. இந்நிலையில், புதன்கிழமையன்று (ஜன. 6, 2021) திடீரென்று சந்தைகளில் நிலையற்றத் தன்மை தென்படவும் முதலீட்டாளர்கள் மிகவும் கலக்கம் அடைந்தனர்.

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டி, புதனன்று காலை 14,240 புள்ளிகள் என்ற நல்ல நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. ஒருகட்டத்தில் இன்ட்ராடே சாதனை அளவாக 14,244.15 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால் சிறிது நேரத்தில் சந்தை மீண்டும் வேகமாக சரியத் தொடங்கியது.

 

குறைந்தபட்ச அளவாக 14,039 புள்ளிகள் வரை இறங்கியது. வர்த்தக நேர முடிவில் 14,146 புள்ளிகளாக இருந்தது. இது, முந்தைய நாளைக் (ஜன. 5) காட்டிலும் 53.25 புள்ளிகள் குறைவாகும். நிப்டியின் 50 முக்கியப் பங்குகளில், 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், 26 நிறுவனப் பங்குகளின் விலை சரிவுடனும் வர்த்தகம் ஆகின. 

 

அதேபோல், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 48,616 புள்ளிகள் என்ற அதிகபட்ச நிலையுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே 47,864 புள்ளிகள் வரை சரிந்தது. இறுதியில், 48,174 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. முதல் நாள் வர்த்தகத்துடன் (48,437) ஒப்பிடுகையில் இது 263.72 புள்ளிகள் வீழ்ச்சியாகும். சென்செக்ஸில் பங்குகளின் மதிப்பைக் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்குகள் ஓரளவு வளர்ச்சி கண்டன. 16 நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 

 

ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட பின்னடைவே இந்திய பங்குச்சந்தைகளின் சரிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. புதிய வகை கரோனாவால் ஐரோப்பிய நாடுகள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன. உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தால் பங்குச்சந்தைகளில் நிலையற்றத்தன்மை உருவானதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

 

ஒருவேளை, நிப்டி 13,950 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம் சென்றிருந்தால் அடுத்து வரும் நாள்களும் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கும். கடந்த மூன்று வர்த்தக தினங்களும் ஏற்றத்தில் இருந்த நிலையில், திடீரென்று புதனன்று கரடியின் பிடியில் சந்தை சிக்கிக்கொண்டது, முதலீட்டாளர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர், கிடைத்த வரை லாபம் என்ற ரீதியில் பங்குகளை விற்கத் தொடங்கினர். இத்தகைய திடீர் நிலையற்றத் தன்மையை பங்குச்சந்தை நிபுணர்கள், முதலீட்டாளர்கள் அந்தரத்தில் தொங்கும் மனிதனின் நிலை என்கிறார்கள்.


இந்த திடீர் நிலையற்றத் தன்மை காளைகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றாலும்கூட, அண்மைக் காலங்களில் பலமுறை இந்த கணிப்பு பொய்த்தும் போயிருக்கிறது என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள். 

 

''நிப்டி 13,950 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து இருந்தால், காளைகளை வீழ்த்தி கரடிகளின் பிடியில் சந்தை சிக்கிக் கொண்டதாக கருதலாம். இன்ட்ராடே வர்த்தகத்தில் நிப்டி 14,039 புள்ளிகளாக சரிந்தாலும் பின்னர் படிப்படியாக உயர்ந்து 14,146.30 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்திருப்பது மோசமான சமிக்ஞை அல்ல,'' என்கிறார் டெக்னிகல் ரிசர்ட் மற்றும் டிரேடிங் அட்வைசரி நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர், பங்குச்சந்தை ஆய்வாளர் மஸார் முஹம்மது. 

 

மேலும், அடுத்தடுத்த வர்த்தக நாள்களில் நிப்டி 14,244 புள்ளிகளில் இருந்து மேலே உயரும்பட்சத்தில் 14,450 புள்ளிகள் வரை செல்லக்கூடும்; சரிவைச் சந்திக்கும்பட்சத்தில் 14,000 புள்ளிகள் வரை இறங்கலாம் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. 

 

சந்தை சரிவில் இருந்தபோதும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், வேதாந்தா, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க், கண்டெய்னர் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன, இந்திரபிரஸ்தா காஸ், ஹிண்டால்கோ, கெயில், பாட்டா இண்டியா, வோல்டாஸ், யுபிஎல், மஹாநகர் காஸ், கிராசிம், அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், ஹேவல்ஸ் மற்றும் எல் அன்டு டி ஆகிய நிறுவனப் பங்குகள் ஓரளவு ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகின. 

 

அதேநேரம், ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிரமல் என்டர்பிரைசஸ், பஜாஜ் பைனான்ஸ், எஸ்கார்ட்ஸ் மற்றும் டாபர் நிறுவனப் பங்குகளின் விலைகள் பெரும் சரிவைக் கண்டன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.