Skip to main content

ஜிப்மர் மருத்துவர், அமைச்சரவை எழுத்தர், மதுக்கடை உரிமையாளர் உட்பட 13  பேருக்கு புதிதாக கரோனா!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

corona in puducherry

 

புதுச்சேரியில்  46 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நேற்று ஜிப்மர் மருத்துவர், அமைச்சரவை எழுத்தர் உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 36 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 13 இடங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் குருமாம்பேட்டையை சேர்ந்தவர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார். புதுச்சேரியில் மொத்தமாக இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேர் குணமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் இன்று மேலும் நான்கு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொம்பாக்கம் மதுக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, அன்னை தெரசா நகரை சேர்ந்த ஒருவர், சென்னையில் வசிக்கும் ஒருவர் என நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

 

 


இதனிடையே இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார்  நிருபர்களுக்கு அளித்த வீடியோ பதிவில், “புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவர் ஒருவர்  கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கரோனா வார்டில் பணிபுரிந்த அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டாக்டர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது புதுச்சேரியில் இதுதான் முதல் முறை” என கூறினார். மேலும், ”ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் முககவசம் அணிந்து, கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முககவசம் மூக்கை முழுதும் மூடி இருக்குமாறு அணியவேண்டும். 50 சதவீதம் பேர் அவ்வாறு அணிவதில்லை'' எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.