Skip to main content

புதுச்சேரியில் ஒரே நாளில் 100-ஐ தாண்டிய கரோனா! மூடப்பட்ட ஆளுநர் மாளிகை...

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
Corona of 112 people in one day in Puducherry Governor's House Closure!

 

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று கரோனா தொற்றின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில், முதன்முறையாக இன்று தொற்றின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியில் 79 நபர்களுக்கும், காரைக்காலில் 25 நபர்களுக்கும், ஏனாமில் 8 நபர்களுக்கும் என ஒரே நாளில் 112 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,151 ஆக  உயர்ந்துள்ளது.

தற்போது கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் 353 பேரும், ஜிப்மரில் 109 பேரும், கொவைட் கேர் சென்டரில் 31 பேரும், காரைக்காலில் 35 பேரும், ஏனாமில் 20 பேரும், மாஹேவில் 7 பேரும் என மொத்தம் 553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இன்று 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் முழுவதும் 21,865 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 441 பேருக்கு சோதனை முடிவுகள் வெளிவரவேண்டி உள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Corona of 112 people in one day in Puducherry Governor's House Closure!

 

புதுச்சேரியில் முதன்முறையாக தொற்றின் எண்ணிக்கை 100- ஐ தாண்டியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் சமூக விழிப்புணர்வோடு செயல்படவிலை எனில் தொற்றின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

 

Corona of 112 people in one day in Puducherry Governor's House Closure!

 

இதனிடையே புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அலுவலகம் 48 மணி நேரத்துக்கு மேலாக மூடப்படுகிறது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  உட்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கும் உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிரண்பேடி இதுவரை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.