Skip to main content

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க ஏ.கே.அந்தோணி மறுப்பு!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கடந்த மாதம் 25 ஆம் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு செயல் தலைவர்கள் இருவரை நியமிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிவு செய்தது. தென்மாநிலங்களில் இருந்து செயல் தலைவர்கள் நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

 

 

CONGRESS WORKING PRESIDENT

 

 


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோணி மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர்களின் பெயர்கள் பரிசீலனை செய்ததாகவும், உடல் நலக்குறைபாடு காரணமாக செயல்தலைவர் பதவியை அந்தோணி ஏற்க மறுத்து விட்டார். அதே போல் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை அடுத்து வேணுகோபால் செயல்தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் ஆகியோர்களின் பெயர்கள் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாகவும், இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (19.01.2023) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு ஆளுநருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

 

 

Next Story

2024 நாடாளுமன்றத் தேர்தல்- மூன்று குழுக்களை அமைத்தது காங்கிரஸ்! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

2024 Parliamentary Election- Congress Forms Three Committees!

 

வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக மூன்று குழுக்களை அமைத்தது அகில இந்திய காங்கிரஸ் கட்சி. 

 

இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயல்பாட்டுக் குழு, யாத்திரைக் குழு ஆகிய மூன்று குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. 

 

அரசியல் விவகாரங்களுக்கான குழுவில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே, திக் விஜய்சிங், ஆனந்த் சர்மா, ஜிதேந்திர சிங், கே.சி.வேணுகோபால் ஆகிய எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். 

 

தேர்தல் செயல்பாட்டுக் குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜெவாலா, சுனில் உள்ளிட்ட எட்டு பேர் இடம் பெற்றுள்ளனர். 

 

உதய்ப்பூர் கூட்ட முடிவுகளை செயல்படுத்தவும் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் "பாரத் ஜோடா யாத்திரையின்" திட்டமிடலுக்கான குழுவில் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.