Skip to main content

குடியரசு தின அணிவகுப்பில் எந்தெந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன..? முழு விவரம்!

Published on 23/01/2022 | Edited on 23/01/2022

 

 

The Complete Collection of Decorative Vehicles That Can Be Involved In The Republic Day Team Class!


இந்திய நாட்டின் 73- வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26- ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அத்துடன், டெல்லி காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

 

குடியரசு தின விழாவில் நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம் பெறும். அத்துடன், ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெறும். இந்த ஊர்திகள் அனைத்தும் டெல்லி ராஜபாதையில் அணி வகுத்து செல்லும்.

 

அந்த வகையில், வரும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் குறித்து முழுமையாகப் பார்ப்போம். இந்தாண்டு அணிவகுப்பில் மொத்தம் 25 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. இதில் மத்திய அரசின் முக்கிய துறைகளைச் சார்ந்த 13 அலங்கார ஊர்திகளும், 12 மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன. 

 

அருணாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கோவா, உத்தரகாண்ட், ஹரியானா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் டெல்லி அணி வகுப்பில் கலந்துக் கொள்கின்றனர். 

 

உத்தராகண்ட் மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் பத்ரிநாத் கோயில் வடிவம், அழகான மலர்களின் தோற்றம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், குஜராத் மாநிலத்தின் அலங்கார ஊர்தி ஜாலியன் வாலாபாக் படுகொலையை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹரியானா அலங்கார ஊர்தியில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட உருவங்களும், உத்தரப்பிரதேச ஊர்தியில் வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் உருவமும், கர்நாடகா ஊர்தியில் அனுமன் சிலையும் இடம்பெற்றுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.