Skip to main content

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு; கொண்டாடும் கல்லூரி மாணவிகள்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

College students praise Kerala Chief Minister Pinarayi Vijayan
கோப்புக்காட்சி

 

மாணவிகளின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு தேசத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் அறிவிக்காத விஷயத்தை கேரள அரசு அமல்படுத்தியதால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை பெண்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டும் என்றால், அவர்களின் வருகைப்பதிவு 75 சதவீதமாக இருக்க வேண்டும். அப்படி குறையும் பட்சத்தில் அவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக, இத்தகைய நடைமுறை மாணவர்களை விட மாணவிகளுக்கு பெரிய பாரமாக இருக்கிறது.

 

ஏற்கனவே தவிர்க்க முடியாத காரணங்கள், உடல்நலக்குறைவு போன்றவற்றுக்காக விடுமுறை எடுக்கும் மாணவிகள், மாதவிடாய் நேரங்களில் கண்டிப்பாக இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அதனால், மாணவிகளின் வருகைப்பதிவு, சில நேரங்களில் 75 சதவீதத்தை எட்ட முடியாமல் செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்படுகிறது.

 

இது போன்று மாணவிகளின் வெளியே சொல்ல முடியாத விஷயங்களால், அவர்கள் படும் சிரமங்கள் மாணவிகளுக்குள்ளே புதைந்தும் போயிருக்கிறது. ஆனால், இதைப் புரிந்துகொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், மாதவிடாய் காலங்களில் மாணவிகள் எதிர்கொள்ளும் மனம் மற்றும் உடல் ரீதியான சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாதவிடாய் விடுப்பு நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

 

அதற்கேற்ப, மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு சலுகையாக, கல்லூரி நடைமுறையின்படி 75 சதவீதமாக இருக்கும் வருகைப்பதிவை 73 சதவீதமாகக் குறைத்துள்ளார். அதன்படி, மாதவிடாய் காலங்களில் மாணவிகள் இரண்டு நாட்கள் கல்லூரிக்கு வரவேண்டிய அவசியமில்லை. மாதந்தோறும் அவர்கள் எடுக்கும் விடுமுறைகள் வருகைப்பதிவை பாதிக்காது. மாணவிகள் கல்லூரிக்கு வந்ததாகவே கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தேசத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் அறிவிக்காத இந்த அறிவிப்பு கேரளாவில் கொண்டுவரப்பட்டதால் முதல்வர் பினராயி விஜயனை மாணவிகள் கொண்டாடி வருகின்றனர்.

 

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலின் வரிசையில் வீணா விஜயன்; கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kerala CM Pinarayi Vijayan daughter filed a case against the Enforcement Directorate

கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின்  ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’  நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது

இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.