Skip to main content

ஹெலிகாப்டர் விபத்து - கேப்டன் வருண் சிங் உயிர் பிரிந்தது!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

varun

 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

 

 

இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

கேப்டன் வருண் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "குரூப் கேப்டன் வருண் சிங் பெருமையுடனும், வீரத்துடனும் மற்றும் மிகுந்த தொழில்முறையுடனும் தேசத்திற்குச் சேவையாற்றினார். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய பெருஞ்சேவையை என்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

PM Modi inaugurated the International Air Show

 

பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 14வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமான தளத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

 

அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் என முக்கியமானவர்கள் கலந்துகொண்டுள்ள இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் இந்த கண்காட்சியில் உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, வானில் சாகசங்களை நிகழ்த்தியது. 

 

இந்த கண்காட்சி மேக் இன் இந்தியா, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சர்வதேச விமான கண்காட்சி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

 

 

Next Story

'அக்னிபத்' திட்டத்தில் சேர மூன்று நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம்! 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

56,960 people apply to join 'Agnipath' scheme in three days!

 

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேருவதற்கு மூன்று நாட்களில் 56960- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 

 

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேருவதற்கு வரும் ஜூன் 24- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று (26/06/2022) வரை மூன்று நாட்களில் 56960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் ஜூலை 5- ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னதாக, அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14- ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் நிலவும் நிலையில், மூன்றே நாட்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.