Skip to main content

நடுரோட்டில் போலீஸ் அதிகாரி மீது கொடூர தாக்குதல்... மேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் அராஜகம்!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

BJP people attacked the police in the rally; The excitement in West Bengal

 

பாஜக கட்சிக் கொடியுடன் அசிஸ்டெண்ட் கமிஷனரை விரட்டி விரட்டி தாக்கிய பாஜகவினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவினரை போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் கைதுசெய்து வருவதாகவும் புகார் சொல்லப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை நோக்கி 'நபன்னா அபிஜன்' என்ற பெயரில் பேரணி செல்லப்போவதாக பாஜக சார்பில் திட்டமிடப்பட்டது. நபின்னா அபிஜன் என்றால், ஊழலுக்கு எதிரான போராட்டம் எனும் பொருள்படும்.

 

இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, மேற்குவங்க மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் குவிந்து வந்தனர். இதற்காக, ஏழு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக 56 லட்சங்கள் செலவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி ஏராளமான பேருந்துகளில் பேரணியில் பங்கேற்பதற்காக வந்தனர். 

 

இத்தனைக்கும், இந்த பேரணிக்கு மேற்கு வங்க அரசு சார்பில், எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. ஆனால், இதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாத பாஜகவினர் பேரணியாக செல்வதிலேயே மும்முரமாக இருந்தனர். பேரணி நாளன்று, அனுமதியில்லாத பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

இதனால், போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது, சோடா பாட்டில்கள், கற்கள் எனக் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போலீசாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

 

கொல்கத்தா அசிஸ்டெண்ட் கமிஷனர் டெப்ஜித் ராய்சவுத்ரி என்பவரை ஓட ஓட விரட்டிய பாஜகவினர், அவர் தடுமாறி கீழே விழுந்த உடன் மிக மோசமாக தாக்கியுள்ளனர். இதில், அவரின் கை உடைக்கப்பட்டிருக்கிறது. அதன் X-ray படங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவரை பாஜகவினர் தாக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த நிலைமையா? எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.