Skip to main content

நடுரோட்டில் போலீஸ் அதிகாரி மீது கொடூர தாக்குதல்... மேற்குவங்கத்தில் பாஜக தொண்டர்கள் அராஜகம்!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

BJP people attacked the police in the rally; The excitement in West Bengal

 

பாஜக கட்சிக் கொடியுடன் அசிஸ்டெண்ட் கமிஷனரை விரட்டி விரட்டி தாக்கிய பாஜகவினரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவினரை போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் கைதுசெய்து வருவதாகவும் புகார் சொல்லப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தை நோக்கி 'நபன்னா அபிஜன்' என்ற பெயரில் பேரணி செல்லப்போவதாக பாஜக சார்பில் திட்டமிடப்பட்டது. நபின்னா அபிஜன் என்றால், ஊழலுக்கு எதிரான போராட்டம் எனும் பொருள்படும்.

 

இந்த பேரணியில் பங்கேற்பதற்காக, மேற்குவங்க மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் குவிந்து வந்தனர். இதற்காக, ஏழு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக 56 லட்சங்கள் செலவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டுமின்றி ஏராளமான பேருந்துகளில் பேரணியில் பங்கேற்பதற்காக வந்தனர். 

 

இத்தனைக்கும், இந்த பேரணிக்கு மேற்கு வங்க அரசு சார்பில், எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. ஆனால், இதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாத பாஜகவினர் பேரணியாக செல்வதிலேயே மும்முரமாக இருந்தனர். பேரணி நாளன்று, அனுமதியில்லாத பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

இதனால், போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீஸார் மீது, சோடா பாட்டில்கள், கற்கள் எனக் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போலீசாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 

 

கொல்கத்தா அசிஸ்டெண்ட் கமிஷனர் டெப்ஜித் ராய்சவுத்ரி என்பவரை ஓட ஓட விரட்டிய பாஜகவினர், அவர் தடுமாறி கீழே விழுந்த உடன் மிக மோசமாக தாக்கியுள்ளனர். இதில், அவரின் கை உடைக்கப்பட்டிருக்கிறது. அதன் X-ray படங்களும் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அசிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவரை பாஜகவினர் தாக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த நிலைமையா? எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.