Skip to main content

ஒரே நாடு ஒரே தேர்தல் பேசும் பாஜக, மூன்று மாநிலங்களில் ஒரு மாநிலத் தேர்தலை அறிவிக்காதது ஏன்? 

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசும் பாஜக, ஹரியானா, மகாராஸ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, தனக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று பயப்படும் ஜார்கண்ட் மாநிலத் தேர்தலை மட்டும் தள்ளிவைத்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி  சாடியுள்ளது.
 

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவான் கேரா கூறியதாவது… “ஹரியானா, மகாராஸ்டிரா தேர்தல்களை வரவேற்கிறோம். ஆனால், தங்கள் மாநிலத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜார்கண்ட் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஏன் அங்கு தேர்தலை அறிவிக்க மத்திய அரசு தயங்குகிறது. இரண்டு மாநிலத் தேர்தல்களை மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து சந்திப்போம். பொருளாதார சீர்கேடு, வேலை இழப்புகள் ஆகியவை முக்கிய பிரச்சனைகளைகா இருக்கும். லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக சென்றனர்.

BJP is the only country with one election and three states  Why not declare a state election?



ஆனால், அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்காமல் மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில கரும்பு விவசாயிகளை டெல்லி கிஸான் காட் செல்ல விடாமல் தடுத்து, எல்லையிலேயே நிறுத்தியிருக்கிறது. கடன் தள்ளுபடி, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் ஆகியவற்றைத்தான் அவர்கள் கோருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 15 லட்சம் வேலை இழப்புகளும், 20 லட்சம் கோடி ரூபாய் பங்குவர்த்தகத்தில் இழப்பும் ஏற்பட்டிருப்பதை காங்கிரஸ் முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யும்” என்றார்.
 

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜிவாலா, “ஹரியானாவிலும், மகாராஸ்டிராவிலும் பாஜக ஆட்சிக்கு சரியான பதிலடிகொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த மாநிலங்களில் முதலாளிகளால் ஏற்படுத்தப்பட்ட முதலாளித்துவ அரசுகளை முதலாளிகளே நடத்துகிறார்கள். வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்” என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.