Skip to main content

கடும் அமளியை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ க்கள் வெளிநடப்பு...

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா முதல்வராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 

bjp mlas walked out of maharashtra assembly

 

 

இதைத் தொடர்ந்து 3 கட்சிகள் சார்பிலும் தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், காங்கிரசின் பாலசாகேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்று கொண்டனர்.  இதனையடுத்து உத்தவ் தாக்கரே நேற்று முறைப்படி முதல்வர் அலுவலகத்திற்கு சென்று அங்கு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டம் தொடங்கப்பட்டது முதல் பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். முறைப்படி அறிவிக்காமல் இந்த சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக கூறி அமளியில் ஈடுபட்ட  பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்