Skip to main content

முதன்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கும் அமித் ஷா...அத்வானியின் சாதனைகளை தக்கவைப்பாரா..?

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வெட்பாளர்கள் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

 

amitshah

 

அதில் பிரதமர் மோடி மறுபடியும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதி, நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூர் தொகுதி, ஸ்மிருதி இரானி மீண்டும் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்தும், அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2014 தேர்தல் வரை காந்திநகர் தொகுதியில் அத்வானி தான் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட பாஜக வின் கோட்டையாக உள்ள அந்த தொகுதியில் அமித் ஷா தனது முதல் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறார். இதுவரை அமித் ஷா 5 முறை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும், அவர் மக்களவைக்காக போட்டியிடுவது இதுவே முதல் முறை.

கடந்த 2014 ஆம் ஆண்டும் அவர் மாநிலங்களவை எம்.பி யாகவே தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அத்வானி வெற்றி பெற்ற தொகுதியில் இந்த முறை அமித் ஷா வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் அத்வானியின் தொகுதியை பறித்து அமித் ஷாவிடம் கொடுத்து விட்டதாக பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.