Skip to main content

பதவி விலகிய சபாநாயகர்; பீகார் அரசியலில் பரபரப்பு 

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

nitheshkumar

 

பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜயகுமார் சின்ஹா தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். 

 

பீகார் மாநிலத்தில் 2017ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை விட்டு பிரிந்து பாஜக ஆதரவுடன் ஆட்சியை தொடர்ந்தார் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார். 2019 தேர்தலில் பிஜேபி மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. அதில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களில் வென்ற நிலையில் பிஜேபி 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இருந்தும் நிதிஷ்குமாரை முதல்வராக ஆக்கி கூட்டணி கட்சியாக பிஹார் அரசியலில் தொடர்ந்தது பாஜக. இந்நிலையில் முதல்வரை மீறி பாரதிய ஜனதா கட்சி பீகார் மாநிலத்தில் செயல்படுவதாக சமீப காலங்களில் புகார் எழுந்தது. அதோடில்லாமல், பாஜகவை சேர்ந்த சட்டப் பேரவை சபாநாயகர் விஜயகுமார் சின்ஹா ஆளும் அரசுக்கு எதிராகவே கேள்விகள் எழுப்பியது பீகார் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.  

 

இதனால் பிரதமர் மோடியுடன் நடக்கும் கூட்டங்களை புறக்கணிக்க ஆரம்பித்த நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் முதல்வர் பதவியில் இருந்தும் விலகிய நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கான அழைப்பு விடுத்ததால் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார் நிதிஷ்குமார். 2019 தேர்தலில் 79 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள  கூட்டணி ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் சேர்ந்ததால் 124 இடங்களுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார். 

 

இந்நிலையில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி மகாத்பந்தன் கூட்டணி என அழைக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.  இருந்தும் சபாநாயகராக இருக்கும் பாஜகவின் விஜய் குமார் சின்ஹா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எம்.எல்.ஏ க்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர். எதிர்ப்பு வலுத்த நிலையில் விஜய்குமார்  சின்ஹா சபாநாயகர் பதவியில் விலகினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.