ஓடும் ரயிலில் ஏறிய மர்ம நபர் ஒருவர் பெண்ணின் கைப்பையை பிடிங்கிக்கொண்டு இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை-புனே இடையே செல்லும் பயணிகள் ரயிலில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். அவர் இறங்கும் ல்டேஷன் வந்ததன் காரணமாக அவர் ரயிலின் கதவருகே வந்து நின்றுள்ளார்.

Advertisment

ரயில் மெதுவாக சென்ற அந்த நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரின் கைப்பையை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.