Skip to main content

தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி ஏ.டி.எம்.மில் பண மோசடி! சி.சி.டி.வி. காட்சிகளால்  24 மணி நேரத்தில் குற்றவாளி கைது!

Published on 15/07/2020 | Edited on 15/07/2020
atm

 

புதுச்சேரி கிருமாம்பாக்கம் தண்ணீர் தொட்டி வீதியை சார்ந்தவர் லட்சுமணன். கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்டன்டெராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க தெரியாததால் இதுவரை தெரிந்தவர்களை அழைத்து சென்று பணம்  எடுத்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் அரியாங்குப்பம், சொர்ணாநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பும்போது ஏ.டி.எம்  சென்றுள்ளார் . அங்கு பணம் எடுத்து தருமாறு அங்கிருந்த ஒருவரிடம் கேட்டுள்ளார். அவர் பின் நம்பரை போட்டுவிட்டு வேலை செய்யவில்லை என்று கூறி ஏ.டி.எம் கார்டை திரும்ப கொடுத்ததால் லட்சுமணன்  சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

 

atm


இதனால் மீண்டும் அரியாங்குப்பம் வந்த அவர் வங்கியில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அரியாங்குப்பம் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் திருடிய மதிகிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்த முருகன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவரது பெயர் முருகன் என்பதும் சென்னையில் உணவகத்தில் பணியாற்றிய அவர்  கரோனா நோய் தொற்றுவால் வேலையிழந்ததால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இதேபோன்று ஏ.டி.எம்.  மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது