Skip to main content

ஆசியக் கோப்பை 2023; சாக்‌ஷி மாலிக் முக்கிய முடிவு

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Asia Cup 2023; Important decision taken by Sakshi Malik

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் தற்போது அந்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

 

முன்னதாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 7 வீராங்கனைகள் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் கொடுத்தார்கள். புகாரின் விவரங்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், மல்யுத்த வீரர்களின் உடல் அங்கங்களை அவர்களது அனுமதியின்று தொட்டதாகவும், பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லைகளை கொடுத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2022 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய மல்யுத்த போட்டிகளின் நினைவாக நடைபெற்ற புகைப்பட நிகழ்வில் வீராங்கனை ஒருவருக்கு பிரிஜ் பூஷண் சிங் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதை புகைப்பட நிகழ்வின் போது உடன் இருந்த  சர்வதேச நடுவரான ஜக்பீர் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். பிரிஜ் பூஷண் சிங் மீதான வழக்குகளில் பட்டியலிட்டுள்ள 125 சாட்சிகளில் ஜக்பீர் சிங்கும் ஒருவர்.

 

இதனிடையே ஆசியக் கோப்பை போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் பங்கேற்பதற்கான தேர்வு வரும் ஜுன் 12 முதல் 15 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இந்த தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். வீரர்களின் விவரங்களை சமர்ப்பித்த பின் போட்டி நடைபெற இடையில் ஒரு மாதமே உள்ளது. இந்நிலையில் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனைவரும் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வில் அவர்கள் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி எழுகிறது.

 

இதனிடையே, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுத்தால் தான் ஆசியப் போட்டியில் பங்கேற்போம். உளவியல் ரீதியாக வீராங்கனைகள் எத்தகைய பாதிப்பை சந்தித்துள்ளனர் என்பதை உணராமல் இருக்கின்றனர் என சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வென்ற போட்டியாக மல்யுத்தம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.