K J Alphons

பாஜகவைச்சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பியுமான கேஜே அல்போன்ஸ், அம்பானி, அதானி போன்றவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் எனத்தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: முதலாளிகளின் ஊதுகுழல் என்று நீங்கள் என்னைக் குற்றம் சாட்டலாம். ரிலையன்ஸாக இருந்தாலும் சரி, அம்பானியாக இருந்தாலும் சரி, அதானியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, அவர்கள் வணங்கப்பட வேண்டும். ஏனென்றால் அவர்கள் வேலை தருகிறார்கள். இந்த நாட்டில் பணத்தை உருவாக்கும் ஒவ்வொரு தொழிலதிபரும் வேலைகளை உருவாக்குகிறார்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறு கேஜே அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

கேஜே அல்போன்ஸின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.