Skip to main content

பசுமை ஏரிசக்தி துறையில் மிகுந்த கவனம் செலுத்தும் அதானி!

Published on 17/04/2022 | Edited on 17/04/2022

 

Adani focuses on green energy

 

உலகில் ஆறாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ள கவுதம் அதானி எதிர்காலத்தில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

உலகளவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி 9.15 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் ஆறாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார். கடந்த மார்ச் 11- ஆம் தேதி 6.80 லட்சம் கோடியாக இருந்த அதானியின் சொத்துக்கள், அடுத்த 33 நாட்களில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 

 

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அதானி நிறுவனத்தில் கடந்த வாரம் ரூபாய் 15,000 கோடி முதலீடு செய்ததன் எதிரொலியாக, பங்கு மதிப்புகள் அதிகரித்ததே அதானியின் அதிவேக முன்னேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், கடந்த மூன்று மாதங்களில் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், வாரன் பஃபெட் ஆகியோரின் சொத்து மதிப்பு உயர்வை விட அதானியின் சொத்து மதிப்பு உயர்வு அதிகமாகவே உள்ளது. 

 

விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்டக் கட்டமைப்புத் துறையிலும், எரிசக்தி துறையிலும் அதிகளவில் முதலீடு செய்துள்ளார் அதானி. குறிப்பாக, எதிர்காலத்தில் ஏற்றம்பெறும் எனக் கருதப்படும் பசுமை ஏரிசக்தி துறையில் அதானி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். 

 

இதன் காரணமாக, வரும் காலங்களிலும் அதானியின் சொத்து மதிப்பு மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக, பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றன. 

 

தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 18.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சூழல் சரியாக அமைந்து இந்த வேகம் தொடர்ந்தால், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி விரைவில் முதலிடத்தை கூட பிடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.