Skip to main content

8 வயதில் 6.6 அடி உயரம்... வருடத்திற்கு 4 அங்குலம் வளரும் சிறுவன்!!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

sd

 

உ.பி மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் கரண் சிங். 8 வயதான சிறுவனாக கரண் சிங்கின் உயரம் 6.6 அடி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் அவர், தன் நண்பர்களை விட இரண்டு மடங்கு உயரமாக இருக்கிறார். கரண் சிங் ஒவ்வொரு வருடத்திற்கும் 4 அங்குலம் வளர்வதாக அவருடைய பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். கரண் சிங் பிறக்கும் போதே 2 அடி உயரும் இருந்தாராம். இரண்டரை வயதில் கரண் சிங்கின் உயரம் 4 அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளது. 

 

இதுதொடர்பாக குழந்தையின் அம்மா கூறுகையில், " அவன் பிறக்கும் போதே மற்ற பசங்களை விட அதிக உயரமாகத்தான் இருந்தான். நாளடைவில் அவரின் உயரம் மேலும் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனால் பசங்களுக்கு போடும் எந்த உடையும் அவனுக்கு பொருந்தவில்லை. இதனால் பெரியவர்கள் உடுத்தும் ஆடையை அவன் அணிந்து வருகிறான். இதோடு வளர்வது நின்றால் கூட பரவாயில்லை, மேலும் அளவு உயர்ந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார். இந்நிலையில், மகனின் அளவுக்கு அதிகமான வளர்ச்சியினால் அவனை பள்ளியில் சேர்க்க கஷ்டப்பட்டதாகவும், பிறப்பு சான்றிதழ் காட்டித்தான் அவனை பள்ளியில் சேர்ந்ததாகவும் கரண் சிங்கின் தந்தை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்கை நதியில் நடந்த பரிதாபம்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
life of a boy who lost his life in the river Ganges due to superstition

டெல்லியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் ரத்தப் புற்றுநோய் அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் இனிமேல் சிறுவனைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் கவலையில் பெற்றோர்கள் இருந்துள்ளனர். சிறுவனின் பெற்றோருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுவனை, புனித நதியாக நம்பப்படும் கங்கை நதியில் நீராட வைத்தால் புற்றுநோய் குணமாகிவிடும் என்று அவரது பெற்றோர்கள் நினைத்தனர். அதன் காரணமாகச் சிறுவனை டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்கு அழைத்து வந்து அங்குள்ள கங்கை நதியில் நீராட வைத்துள்ளனர். பொதுவாக வட மாநிலங்களில் இது கடும் குளிர்காலம் என்பதால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

ad

இந்த நிலையில், ஏற்கனவே புற்றுநோயால் உடல்நிலை மோசமாக உள்ள சிறுவனை அழைத்து வந்து கங்கை நதியில் நீராட வைத்துள்ளனர். சிறுவனின் தலையை நீரில் மூழ்க வைத்துவிட்டு அவரது பெற்றோர்கள் பிரார்த்தனை செய்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், சிறுவனின் தலையை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் அருகில் இருந்தவர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அருகில் இருந்தவர்களே சிறுவனை தண்ணீரிலிருந்து எடுத்து கரைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோர்களின் அதீத மூடநம்பிக்கையால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய சிறுவன்!

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
boy who threatened the girl with film

விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டியுள்ளார். சிறுவனும், 36 வயதுள்ள பெண்ணும் அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பெண் தனது வீட்டு பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த போது, 17 வயது சிறுவன் பாத்ரூமின்  மேல்பகுதியிலிருந்து செல்போனில் படம் பிடித்திருக்கிறார். தன் மீது  செல்போன் வெளிச்சம் விழுந்தவுடன் அந்தப் பெண் சந்தேகத்துடன் மேலே  பார்த்திருக்கிறார். உடனே அந்த சிறுவன் மறைந்துகொண்டார்.

பாத்ரூமிலிருந்து சேலையை உடுத்திக்கொண்டு அந்தப் பெண் வீட்டுக்கு  வெளியே வந்து சிறுவனை அழைத்துக் கேட்டபோது, தகாத வார்த்தையால்  பேசியதோடு சேலையைப் பிடித்தும் இழுத்திருக்கிறார்.

மேலும், “நீ  குளிக்கும்போது நான் செல்போனில் படம் பிடித்ததை வெளியில் சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியிருக்கிறார். அந்தப் பெண் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு திருத்தங்கல் காவல்நிலையத்தில் புகாரளிக்க, அந்த சிறுவன் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது.