5G auction exceeding 1.50 lakh crore!

5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை ஐந்தாவது நாள் முடிவில் 1.50 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Advertisment

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில்,ஐந்தாவது நாளான இன்று (30/07/2022) 30 ஆவது சுற்றின்முடிவில் 1.50 லட்சம் கோடியை ஏலத்தொகை தாண்டியதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இன்று மட்டும் ஏழு சுற்றுகள் நடைபெற்றது. ஐந்தாவது நாள் ஏலத்திலும் முடிவுகள் எட்டப்படாததால், ஆறாவது நாள் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.