Skip to main content

மனைவி பெயரில் 2 கோடி இன்சூரன்ஸ்; காத்திருந்து கொலை செய்த கணவன்; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

2 crore insurance in wife's name; The husband who waited ; Police investigation shocked

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவியின் பெயர் ஷாலு தேவி. 32 வயதான ஷாலு தேவி கடந்த 5ம் தேதி தனது அண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஷாலு தேவியும் அவரது அண்ணனும் உயிரிழந்தனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் விபத்து என்று வழக்கை முடித்து வைத்தனர். தனது மனைவியின் சடலத்தின் முன் அமர்ந்து அழுத மகேஷ் சிறிது நேரத்திலேயே அவரது மனைவியின் பெயரில் போடப்பட்ட இன்சூரன்ஸ் பணத்தை வாங்குவதற்குச் சென்றுள்ளார்.

 

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விசாரணை செய்துள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டில் உள்ள சிசிடிவியில் சோதனை செய்தபோது விபத்து நடந்த நாளன்று ஷாலு தேவியும் அவரது அண்ணனும் கோவிலுக்குச் சென்ற பின் வீட்டிலிருந்து வெளியில் வந்த மகேஷ் அங்கு நின்றிருந்த காரின் உள்ளே இருந்தவர்களிடம் பேசியுள்ளார். இதன் பின் அந்தக் கார் அங்கிருந்து சென்றுள்ளது.

 

மேலும் விபத்துக்குள்ளான காரும் அங்கிருந்து சென்ற காரும் ஒன்றுதான் என்பதால் காவல்துறையினர் மகேஷிடம் மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விசாரணையில் மகேஷ் மற்றும் ஷாலு தேவி கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். திருமணத்தின்போது போதுமான வரதட்சணை தராததால் அடிக்கடி தம்பதிகள் இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மனைவியைக் கொலை செய்ய எண்ணிய மகேஷ் அதனைப் பணமாக்க முயன்றுள்ளார்.

 

தொடர்ந்து மனைவியின் பெயரில் 2 கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்து ஒரு வருடம் காத்திருந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரையும் கொலை செய்த கூலிப்படை நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெண்கள் ஹிஜாப் அணிந்தால் எப்படி சுவாசிக்க முடியும்?” - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
jaipur BJP MLA says How can women breathe if they wear hijab?

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. 

இதனையடுத்து ஹிஜாப் தடையை திரும்ப பெற கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். உடை, சாதி அடிப்படையில் மக்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த பாஜக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், ஜெய்ப்பூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அது தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவினை சிறப்பிப்பதற்காக சிறப்பு விருந்தினராக பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, பாலமுகுந்த் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அப்பள்ளிக்கு சென்றார். 

அப்போது அவர், அங்கு ஹிஜாப் உடை அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளிடம், “ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. ஹிஜாப் அணிந்திருந்தால் எப்படி சுவாசிக்க முடியும்” என்று ஆட்சேபனைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதோடு ஹிஜாப்பை கழற்றுமாறு கூறியுள்ளார். இதை, இஸ்லாமிய மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ பாலமுகுந்த் ஆச்சார்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

ஓடும் பேருந்தில் 20 வயது தலித் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
Again a Nirbhaya incident; Tragedy of 20-year-old woman in bus

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்‌ஷய் சிங்கிற்கு டெல்லி திஹார் சிறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி  (20/03/2020) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்ற கொடூரச் சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதி இரவு, உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது கான்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு 20 வயது தலித் பெண் ஒருவர் பயணித்துள்ளார். இவர் பேருந்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட கேபினில் அமர்ந்திருந்துள்ளார். பேருந்திற்குள் சில பயணிகளும் இருந்துள்ளனர். அந்த சமயம் இந்த கேபினுக்குள் ஆரிப் மற்றும் லலித் என அடையாளம் காணப்பட்ட டிரைவர்கள், ஓடும் பேருந்தில் அந்த பெண்னை இரண்டு டிரைவர்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது பெண் கூச்சலிட்டதால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லலித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆரிப்பை பேருந்தில் இருந்த பயணிகள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஆரிஃப் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய லலித்தை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.