Skip to main content

யூட்யூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

17 year old girl self delivered a baby by watching youtube videos

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மதிக்கத்தக்க மாணவி. இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவரின் தாய், கண் பார்வை குறைபாடு கொண்டவர். இவரது தந்தை, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே இருக்கும் ஊரில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில், அம்மாணவி வீட்டிலேயே யார் உதவியுமின்றி, பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவர் குழந்தை பெற்றெடுத்து மூன்று நாட்கள் கழித்தே அவரது பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்துள்ளது.

 

வீட்டிலேயே தனக்குத் தானே பிரசவம் பார்த்துக்கொண்டதால் அம்மாணவிக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் வயது 17 என்பதால், மருத்துவமனை மூலம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இவர்களின் வீட்டருகே 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்துவருகிறார். அவருடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டு, காதலாகியுள்ளது என்றும், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையிலும் இருந்துள்ளனர். அதன் மூலம் அம்மாணவி கருத்தறித்துள்ளார்.

 

17 year old girl self delivered a baby by watching youtube videos
                                 மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

 

இதனை பெற்றோரிடம் அவர் கூறாமல் மறைத்துள்ளார். கடந்த 20ஆம் தேதி மாணவிக்குப் பிரசவ வலி வந்துள்ளது. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாணவி அவர் வீட்டின் மேல் உள்ள அறைக்குச் சென்றுள்ளார். பிறகு பிரசவம் குறித்து யூட்யூபில் பார்த்துள்ளார். அதனடிப்படையில் அவர், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, குழந்தையைப் பெற்றெடுத்து, தொப்புள் கொடியையும் அறுத்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், அவர் எந்த வெளியாட்களின் உதவியையும் பெறவில்லை என்றும், பிரசவம் முழுவதையும் தனக்குத் தானே மேற்கொண்டார் என்றும் தெரியவந்துள்ளது. பிரசவம் முடிந்த பின்பு வீட்டில் வழக்கம்போல் அவர் இருந்துள்ளார். அதேசமயம் அவர் அடிக்கடி வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதையும் பெற்றோர்கள் கவனித்துள்ளனர்.

 

ஆனால், கரோனா காலம் என்பதால் ஆன்லைன் வகுப்புகள் இருக்குமென அவர்களும் அதனைப் பெரிதாக கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்நிலையில், அக் 22ஆம் தேதி வீட்டின் மேல் அறையிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. எப்படி வீட்டிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்கிறது என அவரது பெற்றோர்கள் மேலே சென்று பார்த்தபோதுதான், இச்சம்பவம் தெரியவந்துள்ளது. இதனைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தங்கள் மகளிடம் விசாரித்தபோது அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

 

அதுமட்டுமின்றி அவருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதும் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அவரது பெற்றோர், அவரை மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் மாணவிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவியும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், 17 வயது மாணவியைத் தாயாக்கிய அவ்வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.