Skip to main content

3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

மதுரை வேலம்மாள் சிபிஎஸ்சி பள்ளிக்கு 3 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் மூன்றாம் வகுப்பு மாணவர்களை இரும்புக் கதவுக்கு வெளியே நாள் முழுவதும் வெயிலில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாமதமாக வரும் மாணவர்களுக்கு இந்த தண்டனை இப்பள்ளியில் தொடர்ந்து தரப்படுபவதாக பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
 

M V Muthuramalingam

                                           வேலம்மாள் கல்விக்குழுமத் தலைவர் முத்துராமலிங்கம்
 

சென்னை முகப்பேறு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வேலம்மாள் பள்ளி குழுமம் படிப்படியாக இன்று கிட்டதட்ட 40 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மருத்துவமனை என வளர்ந்துள்ளது. மதுரையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் ஒழுக்கத்திற்கும், காலம் தவறாமைக்கும் என்றும் முக்கியத்துவம் அளிப்பதாக நிர்வாகம் கூறி வருகிறது. 

 

boys


 

இந்தப்பள்ளியில் காலையில் பள்ளி துவங்கும் நேரத்திற்கு சரியாக வரவேண்டும். தாமதமாக வந்தால் இரும்பு கேட் பூட்டப்படும். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் கேட் பூட்டப்படும். மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் அப்படி பள்ளி பூட்டப்பட்டால் தங்களது பிள்ளைகளை கையோடு வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். 
 

அதேநேரத்தில் ஆட்டோவிலோ, வேறு நபர்கள் உதவியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தாமதமாக வந்தால் கேட்டிற்கு வெளியே வெயிலில் நிற்க வைக்கப்படுகிறார்கள். அன்று முழுவதும் அவர்கள் வெயிலில் நிற்க வேண்டும். தாமதமாக வந்ததற்காக பள்ளி நிர்வாகம் கொடுக்கும் தண்டனை இதுதான். பெற்றோர்கள் இல்லாமல் தனியாக வரும் மாணவர்கள் தாமதத்துக்காக வெளியே நிறுத்தப்பட்டால், அந்த மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்கிறார்கள் பெற்றோர்களும், பொதுமக்களும். 



 

School



மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ கட்டுப்பாடு அவசியம்தான். ஆனால் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக அந்தக் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய எண்ணமும், கோரிக்கையும். 


 

 

3 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்களை இரும்பு கேட்டுக்கு வெளியே வெயிலில் நிற்க வைக்கும் பள்ளி நிர்வாகம், அந்தப் பள்ளியின் பேருந்து 15 நிமிடங்களோ, அதற்கு மேலேயோ தாமதமாக வந்தால் ஏன் அனுமதிக்கிறது?. காரணம் பண வசூல் வேட்டைக்காகத்தான். அந்தப் பள்ளியின் நோக்கம் என்னவென்றால், கல்விக் கட்டணம் மட்டும் கட்டினால் போதுமா? பள்ளிப் பேருந்தில்தான் மாணவர்கள் வரவேண்டும், அதற்கான தொகையையும் பெற்றோர்கள் கட்ட வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறது. பள்ளி வாகனத்தில் மாணவர்கள் சென்றால் 3 நிமிடம் அல்ல... 3 மணி நேரம் கழித்துச் சென்றாலும் பள்ளியின் இரும்பு கேட் திறக்கும். பள்ளிக்குள் பேருந்து சென்றதும் பேருந்தில் இருந்து இறங்கி யாரிடமும் தாமததுக்கான காரணம் எதையும் சொல்லாமல் நேராக வகுப்பறையில் சென்று அமரலாம், வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர் எதையும் கண்டுகொள்ளமாட்டார். இதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்றனர். 


 

 

மேலும் அவர்கள், தொடர்ந்து ஐந்து நாட்கள் மாணவர்கள் விடுமுறை எடுத்தால், மீண்டும் புதிதாகத்தான் அட்மிஷன் போட வேண்டும் என்று கராராக இருக்கிறது இந்த பள்ளி. தமிழக அரசு தனியார் பள்ளிகளை கவனிக்கிறதா? அரசு வகுத்து கொடுத்த விதிமுறைகளை பின்பற்றுகிறதா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கிறார்களா? கூடுதலாக வசூலிக்கிறார்களா? கல்விக் கட்டணம் பெற்றுக்கொண்டு பிஞ்சுக் குழந்தைகளை நாள் முழுவதும் வெயிலில் நிற்க வைப்பது இந்த சாலையில் சென்று வரும் அனைவருக்கும் தெரியும்போது, அரசுக்கு தெரியாதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கொந்தளிக்கிறார்கள் பெற்றோர்களும், பொதுமக்களும். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.