Skip to main content

ரகசிய வீடியோ எடுத்து சிறைக்குப் போன திருச்சி ஜானகி என்னும் ஜானகிராமன்!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

trichy


திருச்சியில் ஜானகி என்கிற ஜானகிராமன் தான் நடத்தும் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்ணை ஊரடங்கைப் பயன்படுத்தி தன் வீட்டில் தங்க வைத்து, குளிக்கும்போது வீடியோ எடுத்த விவகாரம் போலிஸ் கமிஷனர் வரை புகார் சென்றதையடுத்து ஜானகிராமன் தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 
 

 

ஜானகிராமன் விவகாரம் குறித்து திருச்சி மாநகர போலிஸ் ரகசியம் காத்து வந்தது குறித்து போலிஸ் அதிகாரியிடம் விசாரித்தபோது, பாதிக்கபட்டவர் மைனர் பெண் என்பதால் இது குறித்து தகவல் வெளியிடவில்லை என்றனர்.

ஜானகிராமன் பெண்கள் விடுதி நடத்திய காஜாநகர் பகுதியில் உள்ள மக்கள் நக்கீரனை தொடர்பு கொண்டு, 'எங்க ஏரியாவில் திடீரென நிறைய போலிசார் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விடுதியைக் கடந்த 3 நாட்களாக சல்லடையாகச் சோதனை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். போலிசார் எப்போதும் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இது எங்களுக்குப் பதட்டமாகவே இருக்கிறது' என்று தொடர்ந்து தகவல் வர, நாம் அந்தப் பகுதியில் விசாரிக்க ஆரம்பித்தோம்.

கடந்த 2018ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவி (45) என்பவர் சென்னை ஆதம்பாக்கம் தில்லை பெண்கள் விடுதி நடத்தியபோது விடுதி அறையில் ரகசிய கேமிரா வைத்து பெண்களைப் படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் விடுதிகள் நடத்துவதற்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
 


இந்த நிலையில் தான் ஆச்சாரமாக இருந்து பழக்கப்பட்ட குடும்பம் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் காஜா நகரில் ஜானகிராமன் நடத்தி வந்த பெண்கள் விடுதிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விடுதியைக் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்திருக்கிறார். அந்தப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் உள்ள விடுதிகளுக்கு வாங்கும் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தை வசூல் செய்வதால் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இயல்பாக இங்கு வந்து சேருகிறார்கள். கல்லூரி விடுதியின் கட்டுபாடுகளை மீறி செயல்பட்டு நீக்கப்பட்ட பெண்கள் இந்த விடுதியில் சேர்ந்திருக்கிறார்கள். 
 

trichy


விடுதி மாணவிகளில் சிலர் இரவு நேரங்களில் விடுதியில் முன்பு ரோட்டில் நின்று கொஞ்சி குலாவி பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த அந்தத் தெரு பொதுமக்கள் சிலர் கோபமாகி ஜானகிராமனை அழைத்து கண்டித்திருக்கிறார்கள். ஜானகிராமனின் தாயார்தான் விடுதியைக் கவனித்து வருகிறார். சமையலுக்கு வயதான ஒருவரை நியமித்து இருக்கிறார்கள். ஜனகிராமனுக்கு விடுதியின் முன் அறையில் தங்கி இருக்கிறார். அந்த விடுதியில் அதிகப்பட்சமாக 60 முதல் 80 பெண்கள் வரை தங்கியிருக்கிறார்கள். 

பெண்கள் விடுதிக்கு முறையான அனுமதி இல்லாமல் எந்த போர்டும் வைக்காமல் தான் விடுதி நடத்தி இருக்கிறார். 

ஜானகிராமனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து வரை சென்று தற்போது விடுதியில் தங்கியிருந்த பெண்ணுடன் இருக்கிறாராம். விடுதி விடுமுறை விட்டால் உடனே விடுதியில் உள்ள பாத்ரூம் லைட்டுகளை தான் மாற்றிக்கொண்டே இருப்பாராம். 

தற்போது ஊரடங்கு அறிவிப்பு வெளியானவுடன் விடுதியில் உள்ள அனைத்து பெண்களை ஊருக்கு அனுப்பி விட கேரளவில் இருந்து டான்ஸ் சொல்லி கொடுக்க வந்திருந்த ஒரு பெண், இந்த விடுதியில் தனியே தங்க வேண்டாம் என்று கே.கே. நகரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். 
 

http://onelink.to/nknapp

 

கே.கே. நகர் வீட்டில் தங்க வைத்த அந்த கேரள பெண்ணிற்குத் தெரியாமல் குளிக்கின்ற போது மாடியில் இருந்து வீடியோ எடுத்திருக்கிறார், இதைக் கண்டுபிடித்த அந்தப் பெண், கேரளாவில் உள்ள தன் பெற்றோருக்குத் தகவல் சொல்லவும் உடனடியாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் அழுது கொண்டே புகார் செய்திருக்கிறார். 

உடனே காவல்துறை ஆணையர் நேரடியாக ஜானகிராமன் வீடு, மற்றும் விடுதிகளை ஆய்வு செய்து சீல் வைக்க உத்தரவிட்டார்.  ஒரு பெரிய போலிஸ் படையே சென்று கடந்த 4 நாட்களாக போலிஸ் காவலில் வைக்கப்பட்ட அந்த விடுதி முழுவதும் சல்லடையாகத் தேடப்பட்டு கடைசியில் ஜானகிராமன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

ரகசிய வீடியோ எடுத்த வழக்கில் கைதான ஜானகிராமன் திருச்சியில் உள்ள சில முக்கியமான சங்கங்களில் பொறுப்புகளில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 

பெண்கள் விடுதியை எப்படி ஆண் நடத்துவதற்கு இங்கு உள்ள அரசு அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். திருச்சியில் உள்ள பெரும்பாலான தனியார் பெண்கள் விடுதிகளை ஆண்கள் தான் நடத்துகிறார்கள். இதைச் சரியாகக் கவனிக்க வேண்டிய அரசு அதிகாரிகளைக் கவனித்து விட்டால் அவர்கள் இந்த விடுதிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.