Skip to main content

டாஸ்மாக் கடையில் போலி டோக்கன் கொடுத்த 12 பேர் கைது!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

tttt


உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கபட்டு சரக்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நீதிமன்ற  உத்தரவு கிடைத்ததும் அவசியம் கடைகள் திறக்கப்படும் என்பதால் இன்று காலை முதலே மதுப்பிரியர்களின் கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கிவிட்டது. இன்று அதி காலையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு சென்று வரிசையில் காத்திருக்க ஆரம்பித்தனர்.
 


விழுப்புரம் மாவட்டம் மயிலம் டாஸ்மாக் கடையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் நீண்ட வரிசையில் நிற்கும் குடிப்பிரியர்கள் முன்னேற்பாடுகளுடன் ஆளுக்கு ஒரு குடை எடுத்துவந்து அதை வெயில் படாமல் பிடித்தபடி மதுபாட்டில் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விழுப்புரம் அருகே ஜானகிபுரம் டாஸ்மாக் மதுபானக் கடையிலும் நீண்ட வரிசையில் மதுபானம் வாங்க காத்திருந்தனர்.
 

தமிழக அரசு குடிப்பிரியர்களுக்கு டோக்கன் முறையில் தான் சரக்கு தரப்படும் என்று அறிவித்து அதன்படி டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி அரசு வழங்கிய டோக்கனை ஜெராக்ஸ் எடுத்து ஒரு டோக்கன் இருநூறு ரூபாய் என்று கடலூரில் விற்பனை செய்துள்ளனர். இந்தப் போலி டோக்கன் டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர்கள் உடனடியாகத் காவல்துறைக்குத் தகவல் தெரியப்படுத்த, அங்கு நின்றிருந்த போலீசார் போலி டோக்கன் கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற 12 பேர்களைக் கைது செய்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூபாய் 252 கோடி! 

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

Tasmac collects Rs 252 crore in a single day!

 

தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒருநாள் மட்டும் 252 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 

 

மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி, இன்று (01/05/2022) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்று (30/04/2022) கடைகளில் மதுபாட்டில்களை வாங்கக் கூட்டம் அலைமோதியது. இதனால் தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக மதுரையில் ரூபாய் 54.89 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 52.28 கோடிக்கும், திருச்சியில் ரூபாய் 49.78 கோடிக்கும், சேலத்தில் ரூபாய் 48.67 கோடிக்கும், கோவையில் ரூபாய் 46.72 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

 

Next Story

சேலத்தில் திருட்டு டாஸ்மாக் மதுக்கூடங்கள் மூடல்!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Tasmac liquor stores closed in Salem

 

சேலம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி இயங்கிய 12 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 

 

சேலம் மாவட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே அரசின் அனுமதியுடன் பார் எனப்படும் மதுக்கூட வசதி உள்ளது. பெரும்பாலான கடைகளுக்கு மதுக்கூட வசதி இல்லை. இந்நிலையில் சேலம் மாநகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் நடத்தப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து ஏப். 28- ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அனுமதி பெறாத மதுக்கூடங்கள், அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாத மதுக்கூடங்கள் என மொத்தம் 12 மதுக்கூடங்கள் விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வருவது தெரிய வந்தது. 

 

இந்த 12 மதுக்கூடங்களும் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டன. மேலும், சட்ட விரோதமாக மதுக்கூடங்களை நடத்தியதாக அவற்றின் உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.