Skip to main content

உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்... ரஜினி வீட்டுக்கு மிரட்டல் விடுத்த மாணவனின் தந்தை... 

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
rajini - house - The student's father - cuddalore district

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மோப்ப நாய்கள் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தி உள்ளனர். அந்த சோதனைக்குப் பின்னர் வீட்டில் வெடிகுண்டு இல்லை என தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். 

 

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் இந்த மிரட்டலை விடுத்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை நெல்லிக்குப்பத்தில் இருக்கும் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. மேலும், சிறுவனை எச்சரித்து, பெற்றோரிடம் கைப்படையாக எழுதி வாங்கி கொண்டு போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

 

rajini-house-students-father-cuddalore-district

 

இந்த நிலையில் சிறுவனின் தந்தை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி சார் மன்னித்துவிடுங்கள். என் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன். உங்கள் படம் எது வந்தாலும் 3வது, 4வது டிக்கெட் என் டிக்கெட்டாகத்தான் இருக்கும். அண்ணாத்தப் படத்தையும் நாங்கள் பார்ப்போம். மனநிலை பாதிக்கப்பட்ட என் மகன் வீட்டில் இருந்த செல்போனை எடுத்து போன் பண்ணிவிட்டார். மன்னித்து விடுங்கள். உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். 

 

இதனிடையே ரஜினி மக்கள் மன்றத்தினர், அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்ததும், அவர்கள் இல்லத்திற்கு சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

வேதனையைப் பகிர்ந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை; உத்தரவிட்ட தமிழக முதல்வர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Padma Sri Chinnapillai who shared the anguish; Tamil Nadu Chief Minister assured

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் மத்திய அரசு சார்பில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வீடு வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடு கட்டுமான பணியானது இந்த மாதமே தொடங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.